Sunday, October 14, 2012

எனக்கு பிடித்த பாடல்கள்


பங்காளிகள் என்ற படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல். இந்தப் பாடலைக் கேட்டால் என் தந்தை ,என் குழந்தை இருவரும் ஒருசேர என் நினைவில் வந்துவிடுவார்கள். நானும் எங்கப்பாவுக்கு குழந்தை தானே.


சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவதாக அமைந்த பாடல். பாடுபவர் சி.எஸ். ஜெயராமன். நடிப்பவர் டி.கே. பகவதி. இவர்கள் இருவருக்காக நான் இப்பாடலை கேட்டதுண்டு. இப்பாடலின் இசை சோகத்தையும், கவலையையும் சொல்லும்.


'ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதி ஹை' என்ற படத்தில் முகேஷ் பாடிய பாடல். ராஜ்கபூர் நடித்துள்ளார். ஷைலேந்திராவின் பாடல் வரிகள் மிகவும் அருமை. தேசியகீதத்தின் தகுதி இப்பாடலுக்கு உள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது.

5 comments:

  1. சகோ கு.பி
    அருமையான பாடல்கள்.சி எஸ் ஜெயராமன் அய்யா நமக்கு மிகவும் பிடித்த பாடகர். இன்று போய் நாளை வா 'பாடலை இராவணான் பாடுவது அருமை.
    திருச்சி லோகநாதம் அய்யவின் பாடலும் அருமை.ராஜ்கபூரும்தான்.

    அருமை வாழ்த்துக்கள்
    நன்றி!!!

    ReplyDelete
  2. @குபி, சார்வா

    அடப்பாவிகளா இத்தனை நாளு உங்களை யூத்து பதிவருகன்னு நினைச்சு ஏமாந்துடேனேப்பா! :)

    ReplyDelete
    Replies
    1. //இத்தனை நாளு உங்களை யூத்து பதிவருகன்னு நினைச்சு ஏமாந்துடேனேப்பா//

      எப்படியது! புதுப்பாட்டு கேட்டா குமரன்! பழைய பாட்டா கிழவனா!

      Delete
  3. \\இந்தப் பாடலைக் கேட்டால் என் தந்தை ,என் குழந்தை இருவரும் ஒருசேர என் நினைவில் வந்துவிடுவார்கள். நானும் எங்கப்பாவுக்கு குழந்தை தானே.\\ சொத்துக்களை எழுதி வாங்கிய பின்னர் தந்தையை துரத்தும் மகன்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள். இதைப் படிக்கும்போது மனநிறைவாக உள்ளது!! Take care of parents nicely!!



    \\சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவதாக அமைந்த பாடல்.\\ பெரிய வீணை!! ஆனால் அவர் கை அசைக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்!! சிவாஜியை விட்டிருந்தால் நிஜமா வீணை வாசிக்கிரவனே தோத்துப் போயிருப்பான்.

    பழைய ஹிந்திப் பாடல்கள் எல்லாமே இதே மாதிரிதான் இருக்கு, இளையராஜா வரும் வரை அதை தமிழுக்கு எக்கச் சக்கமாய்காப்பியடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய