Sunday, May 20, 2007

பறக்குது பார்...


வறுமையில் வாடிய

முகத்தில் வெளுப்பு

அமைதியின் குறிப்பா?

மதபேதத்தில் பெருகிய

குருதியில் சிகப்பு

தியாகத்தின் குறிப்பா?

ஊழலில் உதிர்ந்த

பணத்தின் பச்சை

வளமையின் குறிப்பா?

இந்தியக் கொடிக்கு

மேலே பறக்குது பார்

மானமும் வேலையின்மையும்

சில வெத்துவேட்டுப்

படிப்பறிவு பட்டங்கள்!!

3 comments:

  1. நச் கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. kavuja nalla irukkupa vaazhthukkal

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய