Wednesday, February 17, 2010

தோழன் அன்பரசுவிற்கு




தோழன் அன்பரசுவிற்கு,

வங்காளத்தில் முதன்முதலாய் அறிமுகமானவன் நீ தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் என்னோடு இருந்ததை விட உன்னோடு தான் அதிகம் இருந்திருப்பேன். கடந்த 25 ஆண்டுகளில் நான் விரும்பிய நட்பு உன்னிடம் தான் கிடைத்தது. நாம் கல்லூரி விட்டுச் செல்லும்போது நான் அழுதுகொண்டிருந்தேன். ‘இது என்ன நிரந்தரப் பிரிவா? பிறகு பார்க்கத்தானே போகிறோம்’ என்றாய். சமாதனப்படுத்தினாய். இப்போது அந்தப் பிரிவு நிரந்தரமாகிவிட்டது. வாழ்க்கை எத்தனை நிலையாமை கொண்டது. என் தாயை இழந்த போது இருந்த அதே வலி. இப்போது நண்பனை இழக்கும்போதும். நீ இறந்தபோன செய்தி பொய்த்துப் போய்விடாதா? வேனில்கால மழையாய் என் வாழ்வில் வந்து போய்விட்டாயே. இனி நான் எங்கு காண்பேன் உன்னை. 

என்றும் உன்னுடன் 
அருண்

1 comment:

  1. Extremely sorry for this loss. May his soul rest in peace. You take care..

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய