Showing posts with label அண்டும் சிண்டும். Show all posts
Showing posts with label அண்டும் சிண்டும். Show all posts

Thursday, August 28, 2008

கலைஞரின் தெளிவான பதில்கள்!

இடம்: டீக்கடை

சிண்டு: அண்ணே! இன்னைக்கு என்ன சேதியா வந்து இருக்கு!

அண்டு: உற்சாகமா Sultan the warrior வருதாம்.

சிண்டு: என்ன இது! சுல்தான் கழுத்துல கொட்டை கட்டிகிட்டு இருக்காரு, விட்டா பட்டையும் நாமத்தயும் போட்டு பண்டாரமாக்கிடுவிங்க போல.

(கலைஞர் டீக்கடைக்கு வரார்!)

அண்டு: உளியின் ஓசை தொபக்கடீர்னு ஊத்திகிச்சாமே?

கலைஞர்:

சுள்ளான் முதல் சுட்டபழம் உள்ளிட்ட

எல்லா மொக்கைக்கும் சூடான பதிவிடும்

கழகத்தின் பதிவுலக போர்வாள் 'லக்கி'

'உளியின் ஓசை' பற்றி பதிவிடாத

காரணத்தால்தான் ஊத்திக்கொண்டது.

சிண்டு: கலைஞர் ஐயா! இலங்கை தமிழர் உரிமை காக்க உங்க கைவசம் எதாச்சும் திட்டம் இருக்கா?

கலைஞர்:

வசனங்கள் மொக்கையாகப் போனாலும்,

அடுத்த வாய்ப்பு தக்கையாகிப் போகாது!

ஈழத்திற்காக என் இன்னலையும் மீறி,

உளியின் ஓசை போன்றதொரு

உன்னதகாவியம் படைக்க உள்ளேன்!

அண்டு: ஈழத்தமிழருக்கு பிரச்சனை தீர்க்கப்போறேனு, உலகத்தமிழர்களையே கொடுமை படுத்த கெளம்பிடுவிங்க போல!

சிண்டு: தமிழ்...தமிழ்...என்று எப்பவும் பேசுற உங்களோட பொண்ணு கவுஜப்புயல் கனிமொழி, காபி வித் அனு என்று ஒரு தமிழ் சானலில் வரும் நிகழ்ச்சியில், இங்கிலிபீசுல மட்டுமே பேசி வெளுத்தாங்களே, அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

கலைஞர்:

ஆங்கிலம் அறியாமல்

மத்திய அமைச்சர் ஆவது எங்ஙனம்

மச்சானுக்கு ஒரு வாய்ப்பு

மருமகனுக்கு ஒரு வாய்ப்பு

மகளுக்கு ஒரு வாய்ப்பு

சிண்டு: நீங்க சமீபத்தில் பழ.நெடுமாறனைப் பற்றி காரசாரமாக கவிதை எழுதி திட்டுரிங்களே! என்ன விடயம்?

கலைஞர்:

உடன்பிறப்பே! கேளாய்!

ஞாநி என்ற கோணி 'ஓ' போட்டு

எழுதிய ஒட்டடைகளை மறுமொழிந்த மடையன் அவன்!

மனைவிகள் ஆயிரமாயிரம் கட்டிய தசரதனை,

மூன்றுமனைவிகள் கட்டிய அடியேனுக்கு ஒப்பிட்டமூடன் அவன்!

தமிழர்குடி கெடுத்த குடிகார இராமனை,

என் குலக்கொழுந்துடன் ஒப்பிட்ட கூற்றுவன் அவன்!

நான் எழுதிய கவிதை ஓர் உறைகல்!

உண்மையைத்தான் கூறும்.

அண்டு: இதுக்கும் கவிதையா! நீங்க சொன்னது உறைகல்லோ கடப்பாகல்லோ தெரியாது. ஆனால் அவர் கூறியது உண்மை தானே! நீங்களும் அக்பர் போல ஆட்சியவிட்டு போக மாட்டீங்க போல... உங்க பசங்களும் ஜஹாங்கீர் போல அப்பன் எப்ப...திண்ணை எப்ப காலியாகும்னு காத்துகிட்டு இருக்காங்க.

கலைஞர்: *****************(Censored)

அண்டு: சிண்டு!!! டோட்டல் பேமிலி டேமேஜ்! இன்னும் பச்சையாக திட்டுரதுக்கு முன்னாடி எஸ்கேப்!!!

Sunday, August 17, 2008

ரீமேக் எதுக்கு? (அ) ரஜினி vs சிரஞ்சீவி

Page 1HTML clipboard

அண்டு: 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதை இனிமேல் தமிழகத்தின் தாரகமந்திரமாக இருக்கவேண்டும்.

சிண்டு: ஏனெண்ணே! அப்படி சொல்லுரிங்க!!

அண்டு: குசேலன், சத்யம் என சரமாரியாக அறுவைகள் வந்து தமிழர்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து சுனாமியாக வரப்போவது சுந்தர்.சி C/O குஷ்பு நடிப்பில் உலகம் சுற்றும் வாலிபன். தமிழகத்தில் இருக்கும் இதர பஞ்சங்களோடு இப்போது கதைப்பஞ்சமும் வந்துவிட்டது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் இந்த கூத்துகள். இப்படியாக போனால் நல்ல படங்கள் என்று ஒன்று விடாமல் நாறடித்துவிடுவார்கள் போலப்பா!

சிண்டு: இதுக்காக தமிழில் ரீமேக் படமே எடுக்கக்கூடாதா?

அண்டு: நான் அப்படி எதுவும் சொல்ல வரல!! ரீமேக் என்று எடுத்துக்கொண்டால், நல்ல படங்களை தற்போதைய காலத்திற்கேற்றவாறு சிறந்த இயக்குனர்கள் உருவாக்கினால் அற்புதமாக வர வாய்ப்புகள்(!) உண்டு. என்னைப் பொருத்தவரை வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தநாள்' படத்தை மணிரத்னம் இயக்கலாம் (எனோ! மணிரத்னம் தவிர எனக்கு யாரும் தோன்றவில்லை).

சிண்டு: ரீமேக் செய்யவே முடியாத தமிழ்படங்கள் உண்டா?

அண்டு: எனக்குத் தெரிந்து யாராலும் எடுக்க முடியாத தமிழ்படங்களென்றால், ஒன்று வஞ்சிக்கோட்டை வாலிபன் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன். இன்றைய நாளில் இவைபோன்ற படங்களை தமிழில் எடுப்பது மிகவும் கடினம். அப்படி எடுத்தால் தசாவதாரத்தில் முதல் பத்து நிமிடம் என பில்டப் காட்சிகளாகத்தான் இருக்குமே தவிர வேறொரு கருமமும் இருக்காது.

மேலும் ஒரு செய்தி ஆயிரத்தில் ஒருவன் ஆங்கிலத்தில் 1935-ல் வெளிவந்த Captain Blood என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படத்தில் மணிமாறனாக நடித்தவர் 'The Adventures of Robinhood' படத்தில் நடித்த Errol Flynn.

சிண்டு: இவரைப் பார்த்தால் நம்ம வாத்தியார் மாதிரியே இருக்குதுண்ணே!!

அண்டு: இவரோட படத்தைப் பார்த்துத்தான் வாத்தியார் உருவானார்.

Captain Blood பார்க்க..!! youtube link.

சிண்டு: சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சிடாரு, தெரியுமா உங்களுக்கு!

அண்டு: இது தெரியாமலா? போகப்போகத்தான் தெரியும் ஆந்திராவில் எத்தனை டிகிரி ஜுரம் என்று!!

சிண்டு: ரஜினி Vs சிரஞ்சீவி?

அண்டு: இந்த படத்தைப் பார்த்துக்கோ!!

சிண்டு: குசேலன் பத்தி எதாவது சொல்லுங்களேன்!

அண்டு: குசேலனில் ரஜினி பேசி புகழ்மிக்க வசனங்களால் (நான் அரசியலுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன! நீங்க உங்க வேலையைப் பாருங்களேன்) அவருடைய ரசிகமணிகள் கொதித்துப்போய்விட்டார்களாம். இப்போதைக்கு வசனங்களை படத்திலிருந்து நீக்கினாலும், இதனுடைய பாதிப்பு அடுத்து 'ரோபோ'வாக வரவுள்ள ரஜினிக்குத் தான்.

சிண்டு: அண்ணே! நல்ல ஆங்கிலப்படங்கள் எல்லாம் megaupload, rapidshare-ல் இருக்கு. இதை எப்படி தரவிறக்கம் செய்வது. கொஞ்சம் சொல்லுங்களேன்.

அண்டு: www.megadl.info, www.megafast.info, www.megafanatic.com இந்த தளங்களுக்கு போய் உனக்குத் தேவையான free லிங்க்-ஐ premiumlink-ஆக மாற்றிக்கொள்ளலாம். பிறகு சுலபமாக தரவிறக்கம் செய்யலாம்.

Saturday, December 22, 2007

சர்வதேசவிழாவில் "வேகம்" திரைப்படம் - என்னக் கொடுமை இது!!

அண்டு: என்னடா சிண்டு? இந்தக் கொடுமைய கேட்டியா?

சிண்டு: வாங்கண்ணே! என்ன விஷயம் சொல்லுங்கண்ணே!!

அண்டு: பொதுவாக இந்தியாவில் வெளிநாட்டுப்படங்கள் என்றால் ஹாலிவுட் படங்களும், சீனமொழி படங்களே வெளியாகின்றன. அதுவும் அடிதடி, மசாலாப் படங்கள் தான் பெருமளவில் வெளியிடப்படுகின்றன.

சிண்டு: நம்ம ஜெட்லி, ஜாக்கிசான், அர்னால்ட் படங்களையா சொல்லுரிங்க!

அண்டு: ஆமாண்டா!! இப்படி படங்கள் வரும்போது, தரமான ஸ்பானிய, பிரென்சு, இத்தாலிய, பாரசீக, ஜப்பானிய, ரஷ்ய மொழிப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் சர்வதேச விழாக்களில் மட்டுமே சாத்தியம். இந்தியாவில் இத்தகைய விழாக்களில் தான் நம்மால் வேற்றுமாநில மொழிகளில் வெளியாகும் சிறந்த படங்களையும்் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இவற்றில் திரையிடப்படும் படங்கள் சமூகசூழல்கள், மனித உறவுகள், கலாச்சாரம் போன்றவற்றைப் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டவைகளாக இருக்கும். இப்படங்களை பார்ப்பதன் மூலம் உலகத் திரைப்படங்கள் எத்தகைய பரிமாணத்தில், எத்தகைய பரிநாம வளர்ச்சி பெற்று சென்று கொண்டு இருக்கிறது என்பதை நன்கு உணர முடியும்.

சிண்டு: அதுக்கென்ன இப்ப!!

அண்டு: அதுகென்னவா? தமிழ்சினிமா.காம் பார்க்கலையா? சமீபத்தில் நடந்த சென்னை சர்வதேச படவிழாவிற்குச் சென்ற நம் படைப்பாளிகளுக்கு மாபெரும் ஒன்று அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. தமிழில் வந்த நல்ல படங்களையும் திரையிட்டு வந்த இந்த படவிழா குழுவினர், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்த 'வேகம்' படத்தையும் திரையிட்டார்களாம். பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை திரையிடுகிற இவர்கள் வேகத்தை திரையிட்டதுதான் பெரும் அதிர்ச்சி.

சிண்டு: 'வேகம்' ஆங்கிலத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற Cellular என்ற திரைப்படத்தில் அப்பட்டமான உல்டா ஆச்சே!! இதுக்கு நம்ம மயிலாபூர் மாம்ஸ் என்ன சொல்லுறார்.

அண்டு: அவர் என்ன சொல்லுவார்! பெரியார் படத்திற்கு பணம் கொடுத்தால் இராஜாஜி பற்றிய படம் எடுக்கவும் பணவுதவி செய்யவேண்டும் என்று சட்டசபையில் சத்தமாக கூறிவிட்டு, தமிழ்மக்களின் இன்றைய தேவையைக் கருதி இந்த ஆங்கில உல்டாவைத்தான் எடுத்துள்ளார்.

சிண்டு: இதெல்லாம் டூ, திரி, போர் மச்!!!!

நன்றி: தமிழ்சினிமா.காம்

Tuesday, November 27, 2007

விஜய்க்கு வலைசரப்புலி நாகை சிவாவுடைய பதில் என்ன?

(இடம்: ஆலமரத்தடி ;; இம்சைகள்: அண்டு & சிண்டு)

அண்டு: இந்த வாரம் எதாவது சூடான செய்தி இருக்காண்ணே!

சிண்டு: இருக்குடா! விஜய்க்கு இது போறாத காலம் போல, போனவாரம் அவரது ரசிகமணிகள் வைத்த கட்டவுட்டில் விஜயின் காலருகே புலி இருக்க, தெந்தமிழகத்தின் சாதிபுலிகள் பாய்ந்து குதித்துள்ளனர். கிலியான ரசிகர்கள் கட்டவுட்டை அகற்றியதாக கேள்வி.

அண்டு: எப்படியோ மேட்டர் நம்ம நாகைசிவாவுக்குத் தெரியல!! தெரிஞ்சி இருந்தா என்ன செய்து இருப்பாரு!!

சிண்டு: என்னவா? "புலியொன்று புறப்பட்டதே!!"னு ஒரு பதிவு போட்டு இருப்பாரு.

சிண்டு: அடேய்! இந்த வாரம் என்ன நடந்தது தெரியுமா? மத்திய அமைச்சர் அன்புமணி ஒரு விழாவில், "ரஜினிகாந்த் சினிமாவில் தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் கடுதாசி் எழுதியதை தொடர்ந்து அவர் படங்களில் தம் அடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகர் விஜயிடமும் தம் அடிப்பது போல நடிப்பதை தவிர்க்கும்படி கேட்டுகிறேன்" என்று ஒரு போடுபோட்டார்.

அண்டு: ரஜினி, விஜய் புகை பிடிப்பதை நிறுத்துவது இருக்கட்டும், இவரு அடம்பிடிக்கிறதை எப்ப நிறுத்தப் போறாரு. இந்தியாவில் ஒரு கோடி பேருக்குக்கிட்ட புகைக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் ரஜினி, விஜய் படம் பார்த்து கெட்டுப்போனவங்களா? முதல்ல அவரோட கட்சியில யாரும் பிடிக்கிறது இல்லயா?

சிண்டு: அதிகமா பேசுரே! அம்புடுதேன்! விஜயே இதை கண்டுக்கல நீ ஏன் ஓவரா ஊளைஉடுரே!!

அண்டு: கண்டுக்கலயா?

சிண்டு: ஆமாண்டா!! அமைச்சரின் இந்த வேண்டுகோள் குறித்து விஜயிடம் கேட்கப்பட்டபோது, "நானும் அமைச்சர் பேசியதை செய்தித்தாள்களில் படித்தேன். இனிமேல் என்னுடைய படங்களில் தம் அடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்" என்று அநியாயத்துக்கு சோமர்சால்ட் அடிச்சார்.

அண்டு: விஜய்ங்ண்ணா!! உங்க படத்தில் இருக்கக்கூடிய யதார்த்தமான ஒரே விடயம் இதுதாங்கண்ணா! அதையும் தூக்கிட்டால் பிறகு இந்தியாவிலே கதை நடக்கிற மாதிரியே இருக்காதுங்கண்ணா!!

சிண்டு: டேய்! என்ன விஜய்ய கலாய்க்கறயா?

அண்டு: சும்மா மிமிக்ரி செய்தண்ணே!!

அண்டு: ஆமா! இதுக்கு மாலடிமை என்ன சொல்லுரார்?

சிண்டு: 2012-ல் பாமக ஆட்சினு சொல்லுரார்!

அண்டு: அப்ப ரஜினி?

சிண்டு: ம்ம்ம்!!! 2012-ல் பாபா ஆட்சினு சொல்லுவார்!! மூடிட்டு அடுத்த கேள்விய கேளு!

அண்டு: ஆமா! சமீபத்தில பொல்லாதவன் படத்தில் வர வசனத்துக்கு தனுஷ், தயாரிப்பாளர் மேல தியாராயர் கல்லூரி நஷ்டஈடு கேட்டுகிறாங்களாமே!

சிண்டு: ஆமாண்டா! தனுஷ் அவரோட அப்பாவ பார்த்து "என்னை ஒரு டாக்டருக்கு படிக்க வைச்சியா, தியாராயர் கல்லூரியில் பி.ஏ. தானே படிக்க வச்சே!!" என்று கேட்பாரே அதனாலயா!!

அண்டு: ஆமாண்ணே!!

அண்டு: ஏனண்ணே! பேசுற படம் எடுத்தால் தானே பிரச்சனை! பேசாம ஊமை எடுத்தா எதுவும் சொல்ல மாட்டாங்க தானே!!

சிண்டு: டேய்! பேசினாலே தப்ப எடுத்துக்கிறானுங்க, பேசாமல் சைகை செய்தால், இரட்டை அர்த்தத்தில் எதாவது விரல்ல காட்டினே, நாக்க நீட்டினே, மூக்க காட்டினே என்று கொலைவெறியோட கொளுத்திடுவானுங்கடா!!

சிண்டு: சரி இதுக்கு மேல பேசினால் நம்ம டப்பா டான்ஸ் ஆடிடும்!! அப்பாலிக்கா அடுத்த வாரம் பார்க்கலாம்!! எஸ்கேப்!!

குறிப்பு: நாகை சிவா அண்ணே! கோபம் படாதிங்க! "பூனை மீது புலி பாய்வது முறையாகுமா?" இந்தவார வலைச்சரப்புலி நீங்க!! சின்னப்பயபுள்ள எதோ உங்க பேரை கொஞ்சம் யுஸ் பண்ணிக்கிறேன்!! மன்னிக்கவும்.

நன்றி: தமிழ்சினிமா.காம்