Tuesday, June 26, 2007

சிவாஜி - இந்த டப்பா படத்துக்கு இப்படியொரு பில்டப்பா!!!

"தப்பா அதிர்ஸுகாது!!" சிவாஜி படத்த தெலுங்குல பார்த்துட்டேன்! அதுல தான் இந்த டயலாக். அந்த கொடுமைய ஏன் கேட்குரீங்க. இதெல்லாம் ஒரு படம்னு எடுத்தவன எதால அடிக்கிறதுனே தெரியல. இந்த டப்பா படத்தை எடுக்கத்தான் 2 வருஷமா 60 கோடி செலவு செய்து இல்லாத பில்டப் கொடுத்தானுங்க. உருப்படாத பயலுவ! படத்தோட மட்டமான கதைய பத்தி எல்லாரும் கேட்டுகேட்டு சலித்து போய் இருப்பீங்க. தமிழ்மண அன்பர்கள் அவங்கவங்க பாணில கதையையும், விமர்சனத்தையும் சொல்லிட்டாங்க. அதனால இங்க எனக்கு தோணினத மட்டும் சொல்லிகிறேன்.

* கதைனு எதுவும் இல்லீங்க!! இரண்டு ரஜினி படம் (படையப்பா, பாட்சா), இரண்டு சங்கர் படம் (முதல்வன், ஜெண்டில்மேன்) ஒரு குண்டால கொட்டி, நல்லா மசாலா கலந்து, அரைவேக்காடுல எடுத்து முடிச்சி இருக்காங்க!!

* படம் முழுக்க தேடினாலும் லாஜிக்னு ஒன்னு இல்லவே இல்ல. ரஜினி, சங்கர் படத்தில் என்னைக்குடா லாஜிக் இருந்து இருக்குனு நீங்க கேட்கலாம். இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் திருந்தி இருக்கிற சமயத்தில், இவங்க ஊடால புகுந்து கெடுக்கிற முயற்சிய ரொம்பவே பாராட்டலாம்.

* தமிழ்சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறேன் என்று ஊரை எமாத்திட்டு இருக்குற டுபாக்கூர் சங்கர் படம் எடுக்கிறதுக்கு பதில் ஆல்பம் எதாவது போட போகலாம். வெயில், இம்சை அரசன் இதுபோல குறைந்த பட்ஜெட்ல நல்ல படம் கொடுத்து லாபமும் பார்க்கும் சங்கர், அரதபழசா போன ஒரு கதைய வச்சிட்டு 30-60 கோடி செலவு செய்து, ஒன்னுதுக்கும் உதவாத படங்களை எடுப்பது ஏனென்று தெரியவில்லை.

* உலக சினிமா பற்றி ஊருக்கு உபதேசம் செய்து வரும் சுஜாதா (இவரு திரைக்கதை எழுதுவது எப்படி?னு வேற நூல் விட்டு இருக்கார்), தான் கற்றதிலிருந்து என்ன பெற்றாரென்று தெரியவில்லை. இந்த படத்தில் அவரோட பங்கு என்னனு தெரியல. அப்படி ஒரு புதுமையான கதைக்களம்.

* விவேக் காமெடினு எதுவும் செய்யல, வெறும் ரஜினியோட புகழ்பாடியாக வர்றார்.

* இதுக்கு சுமனோட வில்லன் ரோல்ல சத்யராஜ் நடிக்க கேட்டாங்களாம். ரகுவரனையே ஒழுங்கா பயன்படுத்தாதவங்க சத்யராஜ்யா பயன்படுத்த போராங்க. கடைசில சுமன் மிதிபட்டு சாகும் போது தெலுங்கு படத்துக்கு இணையான முடிவு.

* ஸ்ரேயா புடவை கட்டினால் மூக்கு சிந்திட்டு இருக்காங்க! சின்னசின்ன டிரஸ் போட்டா எல்லாம் தெரிய ஆடுராங்க!

* ஏ.ஆர்.ரகுமான் இசை பரவாயில்லை ரகம். பாபா-ல வருவது போல, இதுலயும் "லப..லப..லப"னு பின்னணியில கத்துரார். பாடல்கள் ஓகே.

* க்ளைமாக்ஸ்ல ரஜினியைக் க்லோசப்பில் காட்டும்போது, செத்துப்போன எங்க தாத்தா ஞாபகம் தான் வருது. அப்படி ஒரு இளமை முகத்தில். இவரு செய்யற ஸ்டைலப் பார்த்து ஸ்ரேயா ரசிக்கிறது செயற்கையாக இருக்கிறது. தலையில் அடிச்சிகலாம் போல! வெளியே ஆன்மீக அல்டாப்பாகவும், பக்கம்பக்கமாக அறிவுரையும் சொல்லிட்டு அலையும் ரஜினிக்கு ஸ்ரேயாவோட இடுப்ப பிடிச்சிட்டு ஆட சொல்லி எந்த வேதம் சொல்லிதுனு தெரியல!! எங்கே நான் சின்ன வயதில் பார்த்த அந்த பில்டப் இல்லாத பழைய ரஜினினு கேட்கத்தோணுது. படத்தோட நடுவில் கலாய்க்கிற ஸ்டைல் ரசிக்கலாம்.் பழைய ரசிகன் என்கிற முறையில் ரஜினிக்கு ஒரே வேண்டுகோள், "நீங்க நதி இணைப்புக்கு பாக்கெட்ல இருந்து ஒரு கோடி இல்ல..ஒரு பைசா கூட தர வேண்டாம்!! 30 கோடி வாங்கிட்டு இதுபோல ஓட்டகாலணா பெரத படங்களில் நடித்து உங்க ஏழை ரசிகனோட மூளையையும், பாக்கெட்டையும் காலி பண்ணாதீங்கய்யா!!".

* சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

* கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வித்தியாசமாக தோன்றுவதாக ஊடகங்கள் ஒரு கலக்குகலக்கின. ஆனால் எனக்கு குடைக்குள் மழை படத்தில் பார்த்திபன் சொல்லும் வரிகள் தான் நினைவில் வருகிறது (என்ன கோட் இது!!இங்கிலீஷ் படத்தில் வர இராப்பிச்சைகாரன் மாதிரி).

நீ என்னடா சொல்லுறது! படம் ரொம்ப நல்லா போகுதுனு சிலர் சொல்லலாம். இந்த கேவலமான படத்துக்கு ஆயிரத்தில் காசு வச்சி வித்து இருக்கானுங்க. அதை நினைச்சா, இவனுங்க எப்படிப்பட்ட மொள்ளமாரியா இருக்கணும், 1000 ரூபாய் காசு கொடுத்து பார்த்தவனுங்க எவ்வளவு பெரிய ஏமாளிங்கனு தோணுது "நாங்க எமாளி இல்லை, படம் நல்லாதான் இருக்கு"னு சொல்லி மீசைல மண்ணு படலனு போறவங்க என்னை தயவு செய்து திட்டாதீங்க. உங்களோட கருத்து மட்டும் சொல்லுங்க!!

படம் பார்த்த பிறகு எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் நான் (உபயம்: நெட்) ஓசில பார்த்ததுதான்.

Friday, June 22, 2007

துர்கா பூஜா - படங்கள்

மேற்குவங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெறும் விழா "துர்கா பூஜா" ஆகும். நவராத்திரி, தசராவைத்தான் அவர்கள் இவ்வாறு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். அவ்விழாவன்று, "பண்டால்்" என்ற கூடங்கள் அமைக்கப்பட்டு, துர்காமாதா உருவத்தை அமைத்து வழிபடுவார்கள். பண்டால்கள் வெகுஅழகாகவும் நேர்த்தையாகவும் அமைக்கப்பட்டு இருக்கும். பண்டால்கள் துணி, அட்டை, மற்றும் தெர்மகோல் கொண்டு செய்யப்படுகிறது. ஒருமுறை நான் இந்த பண்டால்களையும், துர்காஉருவத்தையும் பார்த்து படம்பிடித்து வந்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

துர்காசிலை செய்யும்போது!!




துர்கா மாதா படங்கள்







பண்டால்கள்




எனக்கு எட்டிய - எட்டாத எட்டு

முதலில் எட்டு விளையாட்டுனு என்னை போட்டுக்கொடுத்த கவிதாயினி காயத்ரியை வன்மையாக கண்டிக்கிறேன். டூவிலர் லைசென்ஸ் எடுக்கத்தான் 8 போட சொல்லுவாங்க. இந்த எட்டு எதுக்குனு தெரியல. என்னையும் ஆட்டத்தில் சேர்த்து விளையாட்ட விபரீதம் ஆக்குரீங்க.

1. என்னோட கண்ணாடி கனவில் புள்டவுசர் விட்டு ஏத்தினது அம்மாவை இழந்த சம்பவம். எனக்கு வாழ்க்கையைக் காட்டிய விரல்கள் கைவிட்டுப்போன பிறகு என்னொட பாதையும், பயணமும் மாறிப்போனது.

2. இரவு முழுக்க படிச்சி எக்ஸாம் எழுதிட்டு, பஸ்ல தூங்கிட்டு போய் காஞ்சிபுரத்தில் இறங்கினதும், அங்க பேருந்துநிலையத்தில் எல்லாரிடமும் 2 ரூபாய் சேகரிச்சு ஊர் வந்து சேர்ந்ததும் மறக்கவே முடியாது.

3. நான் என்னோட கோபத்தால நண்பர்களை இழந்ததில்லை. எனக்கு பிடிக்காத விஷயத்தை யாரவது செய்தால் அங்கிருந்து முதல்ல விலகிடுவேன். அதையே நண்பர்கள் செய்தால், கடுமையாக எடுத்துச் சொல்லுவேன். என்னோட ப்ளஸ் இதுதான். இருப்பினும் கோபம் காரணமாக சில பள்ளி தோழர்களை இழந்தது. பிறகு கோபத்தில் யாரையாவது நோகடித்துவிட்டால், அதிகமாக நொந்துகொள்வேன். மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டேன்.



4. எல்லாக்குழந்தைகள் போல வரட்டு கடவுள்நம்பிக்கையோடு தான் வளர்ந்தேன். காலப்போக்கில் தெளிந்து கடவுள்மறுப்புக் கொள்கையில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது.பிறகு எந்த கஷ்டம் வந்தாலும் கடவுளை துணைக்கழைப்பதில்லை. வரலாற்று சுற்றுப்பயணம் காரணமாக அல்லாமல், கோவிலுக்கு போவதில்லை.

5. என்னைச்சுற்றி இருக்கும் எல்லாரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்வேன். எப்பவும் அது நடக்கிறது இல்ல. சில சமயம் சரியான லூசுபயல்னு நினைக்கத்தோணும். (நீங்க அப்படி நினைக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும்). பேராசிரியர் பெருமையா நகைச்சுவைமன்னன் சொல்லி பேசச்சொல்ல, நான் என்னோட கல்லூரி பிரிவு உபச்சாரவிழாவில் சொன்ன ஜோக்கக்கு ஒரு பயலும் சிரிக்கல. ரொம்ப அவமானமாக போச்சிப்பா!!

6. வாழ்க்கையில் இதுவரை லட்சியம், சாதனை என்று எதுவும் இல்ல. என்னால் முடிந்தவரை வறுமையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யனும். இதுதான் என்னோட லட்சியமாக மற்றும் சாதனையாக இருக்கும். வருங்காலத்தில், எனக்கு மேலும் நல்லதொரு பொருளாதார நிலை அமைந்தால் மேலும் நிறைய உதவி செய்வேன். சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இருப்பதை வெட்கக்கேடாக நினைக்கிறேன். நான் 1000 ரூபாய் வருமானத்தில் குடும்பம் நடத்தும் மனிதர்கள் இருக்கும் இந்தியாவில், 2000 ரூபாய் கொடுத்து சிவாஜி படம் பார்ப்பவன் அல்ல. 1 ரூபாய் (அ) 50 காசுக்கு கீரைக்காரியிடம் குடுமிப்பிடி சண்டை போடுபவனும் அல்ல.

7. என்னுடைய உடன்பிறந்தவர் அண்ணன் மட்டும்தான். முதல்ல அக்கா, தங்கை இல்லயேனு ரொம்ப ஆதங்கப்படுவேன். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்தபிறகு கண்மணி அக்கா, காயத்ரி, கவிதா, மைபிரண்ட், துர்கா என்று பாசமழைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

8. ஹிந்தியே சரியா பேசத்தெரியாம, ட்ரெயின்ல அதுவும் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல டெராடூன் வரை தனியாக போனது. அங்க போயும் குசும்பு அடங்காம ஹரித்வார் போனது. எல்லாம் என்னோட சரித்திர சாதனைகள்.

எப்படி என்னோட வயதெறிச்சல கொட்டிகிட்டீங்க!! நானும் இப்ப அடுத்தவங்க வயதெறிச்சல கொட்டிக்கிறேன்.

விடாதுகருப்பு

அசுரன்

கண்மணி அக்கா

ஆசிப்மீரான் அண்ணாச்சி

சந்தோஷ்

சதுர்வேதி

கண்ணபிரான் ரவிசங்கர்

அணில் மற்றும் கவிதா (முடிந்தால் பீட்டர் தாத்ஸ்யையும் கூட்டிவாங்க)

இதுபோல ஒரு கலவைய யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.