Friday, January 22, 2010

டாக்டர்ர்ர்ர் விஜய் அவர்களை இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது

டாக்டர்ர்ர்ர் விஜய் அவர்களை இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது. நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே! (படக்கோர்வையை உருவாக்கிய அன்பருக்கு நன்றி)

Sunday, January 17, 2010

ஆயிரத்தில் வேறொருவன்


இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே! சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என்ற disclaimer-உடன் தொடங்குகிறது. இதன்பிறகும் படத்தில் வரலாற்றை தேடுவது தேவையில்லாத விடயம். சோழ பாண்டிய போரில் தப்பித்த சோழவம்சத்தின் கடைசி வாரிசைத் தேடி பயணிக்கிறது ஒரு குழு. பாண்டியர்கள் வராமலிருக்க சோழர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த 7 பொறிகளைத் தாண்டி செல்வதுதான் கதையின் முதல்பாதி. படத்தின் இரண்டாவதுபாதி சோழர்கள் வாழும் குகையில் நடக்கிறது.

படத்தின் முதல்பாதியில் கார்த்தி பேசும் போதெல்லாம் ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார். இரண்டாவது படத்திலேயே கார்த்தியின் இந்த முன்னேற்றம் பெரிய விடயம். போகப்போக இரண்டாம் பாதியில் மனிதர் சீரியஸாகிவிடுகிறார்.

ரீமாசென் படத்தின் முக்கிய கதாபாத்திரம். அவர் தான் வில்லி. சந்திரமுகி ஜோதிகா போல இருக்கிறார். பார்த்திபனை மிரட்டுகிறார். என்னதான் ரீமாசென் காலை அகல விரித்து நடித்தாலும், இரண்டாம் பாதியில் நம் மனதில் நிற்பவர் பார்த்திபன். பார்த்திபன் அறிமுகக் காட்சி அருமை. படத்தின் முடிவில் சோழமக்கள் சித்திரவதை செய்யப்படும்போதும், பார்த்திபன் இறக்கும்போதும் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்திச் செல்கிறது. படத்தின் இறுதிக் காட்சிகள் ஈழத்தமிழரை மட்டுமல்ல, வல்லாதிக்கத்தால் நசுக்கப்படும் எந்தவொரு இனமும் அமைப்பும் சந்திக்கும் நிலைமைதான். அது ஈழமாகவோ, காஷ்மீராகவோ, வடகிழக்கிந்தியாவாகவோ, இராக்காகவோ இருக்கலாம், ஆனால் மக்கள் மீதான அடக்குமுறை இப்படித்தான் இருக்கும். வல்லாதிக்கத்தின் வேட்டைநாய்களான ராணுவத்தின் யோக்கியதை அவ்வளவுதான்.

கலை இயக்குனர் சந்தானம் பாரட்டப்படவேண்டிய அளவைவிட அதிகமாக பங்காற்றியுள்ளார். பல வித்யாசமான, ஆச்சர்யமான விடயங்களை நம் கண்முன்னே உண்மைபோல் நிறுத்துகிறார். அவற்றை ராம்ஜி ஒளிப்பதிவு செய்தவிதம் பிரமாதம்.

ஜிவிபிரகாஷின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கிறது. The king arrives, celebration of life போன்ற இசைகள் காட்சிகளுடன் அலட்சியமாகப் பொருந்துவது மிகஅழகு.

தாய் தின்ற மண்ணே… பாடலிலாவது தமிழர் சோகத்தைப் பதிவு செய்த வைரமுத்துவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

படைப்பற்றி பாடமெடுக்கும் கமல் குழியிலிருந்து அடியேன் ராமானுஜதாசன் என்று எகிறிகுதித்ததை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவர்களுக்கு இப்படம் பெரிய ஆறுதல். ஒரு நல்ல, தரமான பழந்தமிழரின் வாழ்வியலைக் கூறும் ஒரு வரலாற்றுப் படம் தமிழில் இதுவரை வரவில்லை. இப்படம் அதுபற்றி கூறவில்லை என்றாலும், அந்த ஆர்வத்திற்கான முதல்கல்லாக ஏற்கலாம்.

7 விதமான பொறிகளின் கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் குறைவுதான். இருப்பினும் இதுவரை தமிழில் வெறும் பாடல்காட்சிகளில் மொக்கையாக பயன்படுத்தப்பட்டு வந்த கிராபிக்ஸ் தொழிற்நுட்பம் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Gladiator வகை சண்டை காட்சி கூட தமிழுக்கு புதுசு. புதைகுழிப் பகுதியில் வரும் நடராஜர் நிழல் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.

The mummy, McKhennas gold, 300, Apocalyptos படங்களின் சாயல் இருப்பினும்,படத்தில் எதுவும் அரைத்தமாவு இல்லை. 100 கோடியில் லஞ்சலாவண்யம் பற்றி மயிருபிளக்கும் சங்கர், மேடைக்கு மேடை வார்த்தைக்கு வார்த்தை புதுமை பற்றி அறிவுரையாற்றிவிட்டு பொறுமையை சோதிக்கும் படங்களை தற்போது கொடுத்துக்கொண்டுவரும் கமல் என ஹைபட்ஜட்டில் பழைய பக்கோடா விற்கும் இவர்கள் செய்யாததை செல்வராகவன் இந்தப்படம் மூலமாக செய்துவிட்டதாக நினைக்கிறேன்.

Apocalypto, Passion ofchrist படங்களில் மொழியே தெரியாமல் சப்டைட்டில் பார்த்து மட்டுமே ஓரளவு புரிந்துகொண்ட படத்தைப் பற்றி பேசி சிலிர்ப்பவர்கள். இந்தப் படத்தில் வரும் 15 அ 20 நிமிட தமிழ் புரியவில்லை என்று சில தமிழ் பதிவர்கள் அங்கலாய்கிறார்கள்.லாஜிக் மீறல் என்றொரு குற்றம். எல்லா mystery, fantasy படங்களிலும் லாஜிக் புஜ்ஜியம் தான்.
 
In overall, A New dish with a different taste.
 
*****************************************************************************

தான் ரசித்ததை தன் குருநாதர்களிடம் மடலனுப்பி கேட்கும் படவா ரசிககண்மணிகள் என்றுதான் திருந்துவார்களோ தெரியாது. கூடிய சீக்கிரத்தில் அதிமேதாவி சாருவிடமோ, சகலகலா ஜெயமோகனிடமோ கருத்துக்கணிப்பு நடக்கும் பாருங்கள். அவர்களும் தன் பங்கிற்கு இரண்டு, மூன்று உலகப்படங்களையோ, மலையாளப் படத்தையோ சொல்லி, பொருத்தம் பார்த்து புடுங்காசூரர்களாகக் காட்டிக்கொள்வார்கள்.