Sunday, August 17, 2008

ரீமேக் எதுக்கு? (அ) ரஜினி vs சிரஞ்சீவி

Page 1HTML clipboard

அண்டு: 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதை இனிமேல் தமிழகத்தின் தாரகமந்திரமாக இருக்கவேண்டும்.

சிண்டு: ஏனெண்ணே! அப்படி சொல்லுரிங்க!!

அண்டு: குசேலன், சத்யம் என சரமாரியாக அறுவைகள் வந்து தமிழர்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து சுனாமியாக வரப்போவது சுந்தர்.சி C/O குஷ்பு நடிப்பில் உலகம் சுற்றும் வாலிபன். தமிழகத்தில் இருக்கும் இதர பஞ்சங்களோடு இப்போது கதைப்பஞ்சமும் வந்துவிட்டது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் இந்த கூத்துகள். இப்படியாக போனால் நல்ல படங்கள் என்று ஒன்று விடாமல் நாறடித்துவிடுவார்கள் போலப்பா!

சிண்டு: இதுக்காக தமிழில் ரீமேக் படமே எடுக்கக்கூடாதா?

அண்டு: நான் அப்படி எதுவும் சொல்ல வரல!! ரீமேக் என்று எடுத்துக்கொண்டால், நல்ல படங்களை தற்போதைய காலத்திற்கேற்றவாறு சிறந்த இயக்குனர்கள் உருவாக்கினால் அற்புதமாக வர வாய்ப்புகள்(!) உண்டு. என்னைப் பொருத்தவரை வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தநாள்' படத்தை மணிரத்னம் இயக்கலாம் (எனோ! மணிரத்னம் தவிர எனக்கு யாரும் தோன்றவில்லை).

சிண்டு: ரீமேக் செய்யவே முடியாத தமிழ்படங்கள் உண்டா?

அண்டு: எனக்குத் தெரிந்து யாராலும் எடுக்க முடியாத தமிழ்படங்களென்றால், ஒன்று வஞ்சிக்கோட்டை வாலிபன் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன். இன்றைய நாளில் இவைபோன்ற படங்களை தமிழில் எடுப்பது மிகவும் கடினம். அப்படி எடுத்தால் தசாவதாரத்தில் முதல் பத்து நிமிடம் என பில்டப் காட்சிகளாகத்தான் இருக்குமே தவிர வேறொரு கருமமும் இருக்காது.

மேலும் ஒரு செய்தி ஆயிரத்தில் ஒருவன் ஆங்கிலத்தில் 1935-ல் வெளிவந்த Captain Blood என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படத்தில் மணிமாறனாக நடித்தவர் 'The Adventures of Robinhood' படத்தில் நடித்த Errol Flynn.

சிண்டு: இவரைப் பார்த்தால் நம்ம வாத்தியார் மாதிரியே இருக்குதுண்ணே!!

அண்டு: இவரோட படத்தைப் பார்த்துத்தான் வாத்தியார் உருவானார்.

Captain Blood பார்க்க..!! youtube link.

சிண்டு: சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சிடாரு, தெரியுமா உங்களுக்கு!

அண்டு: இது தெரியாமலா? போகப்போகத்தான் தெரியும் ஆந்திராவில் எத்தனை டிகிரி ஜுரம் என்று!!

சிண்டு: ரஜினி Vs சிரஞ்சீவி?

அண்டு: இந்த படத்தைப் பார்த்துக்கோ!!

சிண்டு: குசேலன் பத்தி எதாவது சொல்லுங்களேன்!

அண்டு: குசேலனில் ரஜினி பேசி புகழ்மிக்க வசனங்களால் (நான் அரசியலுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன! நீங்க உங்க வேலையைப் பாருங்களேன்) அவருடைய ரசிகமணிகள் கொதித்துப்போய்விட்டார்களாம். இப்போதைக்கு வசனங்களை படத்திலிருந்து நீக்கினாலும், இதனுடைய பாதிப்பு அடுத்து 'ரோபோ'வாக வரவுள்ள ரஜினிக்குத் தான்.

சிண்டு: அண்ணே! நல்ல ஆங்கிலப்படங்கள் எல்லாம் megaupload, rapidshare-ல் இருக்கு. இதை எப்படி தரவிறக்கம் செய்வது. கொஞ்சம் சொல்லுங்களேன்.

அண்டு: www.megadl.info, www.megafast.info, www.megafanatic.com இந்த தளங்களுக்கு போய் உனக்குத் தேவையான free லிங்க்-ஐ premiumlink-ஆக மாற்றிக்கொள்ளலாம். பிறகு சுலபமாக தரவிறக்கம் செய்யலாம்.

Tuesday, August 12, 2008

சாரு நிவேதிதாவின் விமர்சனம் மற்றும் கொஞ்சம் தைமூர்

ew Page 1

குசேலன் படம் பார்த்தேன். பரவாயில்லை! 'கதபறயும்போள்' படம் போல இதுவும் மொக்கையாகத்தான் இருக்கிறது.பசுபதி மற்றும் ரஜினி தவிர யாரும் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. ரஜினியின் இமேஜை நம்பி மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு. இப்படத்தில் ரஜினியைக் குறை சொல்லும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஓவர் ஹைப் கொடுத்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது வாசு. சுமாராக படம் எடுத்துவிட்டு சிவாஜி, தசாவதாரம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறது அவர்களுக்கே ஓவரா படலயா?

இது ஒரு பக்கம் இருக்க. நம்ம சாரு சார், அவரோட தளத்தில் குசேலனை ஒரு பிடி பிடித்துள்ளார். ஆனாலும்,

"ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து? தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்." என்று எழுதி இருந்தார். ஆனால் "ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா?" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்...? அது அவருக்கே புரிந்த விடயம்.

சாரு சார் ஒரு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நூல் எழுதுவதாக சொல்லி இருந்தார். அவருக்கு கவுண்டமணியையே தெரியாதுனு சொல்லிட்டு தமிழ் சினிமாவை பற்றி எப்படி எழுத முடியும் என்று தெரியவில்லை. காமெடியையும் தமிழ் சினிமாவையும் எப்பவும் பிரிக்கமுடியாது. மற்றும் என்னைப் பொருத்தவரை காமெடியன்களுக்குத்தான் சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்புத் திறன் உண்டு. அந்த வகையில் கவுண்டரும் சளைத்தவர் அல்ல. காலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்?

***************

மம்மி படத்தில் வருவது போல ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன். 14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!

**************

Tuesday, August 05, 2008

எம்.ஆர்.ராதா, Zulu, மற்றும் குசேலன்

குசேலன் படத்தில் 25% தான் நான் வருகிறேன் என்று ரஜினி கூறிய பிறகும். பி.வாசு சொன்னத கேட்டு போய், பார்த்து, ஆப்பு வாங்கிவந்து தமிழ்மணத்தில் புலம்பும் அறிவுஜீவிகளே! நீங்கள் ஏமாந்து போனதுக்கு ரஜினியின் டவுசரை எதுக்கு கயட்டனும்!! எதோ போனதுக்கு நயந்தாராவை மீனாவை பார்த்தோமா! வந்தோமானு இருக்கணும்!!

************************

"தொழில்நுட்பத்திலயும் நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறி இருக்கு. ஆனால் சம்ஜெக்ட் தான் அட்வான்ஸ் ஆகல. போட்டி போட்டுகிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப்பார்க்கிறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது? இதுவாமுன்னேற்றம். ஒன்னு சொல்லுரேன் கேளுங்க. நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சி போனாத்தான் தமிழ்படவுலகம் உருப்படும். அப்பத்தான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதையா எடுக்க முன்வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களையே காட்டி ஜனங்களை ஏமாற்ற முடியும்" - இதைக் கூறியது நானில்லை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தவிகடனில் ராதா அவர்களுடைய பழைய பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். இதில் என்ன வியப்பென்றால், அன்று ராதா அவர்கள் கூறியது இன்று நம் தமிழ்த்திரையுலகிற்கு பொருந்துகிறது. ஆனால் ஒரு வேறுபாடு என்னவென்றால், ராதா கூறிய நாலைந்து பேர்... அப்போது முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் அவர்களைத்தான் குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போது நிலைமை இன்னும் மோசம். ரஜினி, கமல் கூட மாறுபட்ட கதையில் நடிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் நடிகர்களாக வலம் வரும் பெரும்பாலானவர்கள் அரைச்சமாவுக் கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். இயக்குனர்களில் கதைக்களம் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் நம்பிக்கையளிப்பது பாலா, சேரன், மிஷ்கின், அமீர். மேலும் புதுவரவுகளான வசந்தபாலன், கற்றதுதமிழ் ராம், சசிகுமார். இருப்பினும் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் போல புதுஇயக்குனர்களும் தமிழ்படவுலகை தன் வசப்படுத்தினால் ஒழிய கதைக்கும், களத்திற்கும் முக்கியத்துவம் ஏற்படாது.

மேலும் ஒழுங்கான தழுவல் படங்கள், குழந்தைகளுக்கான படங்கள், த்ரில்லர் படங்கள் குறைந்துவிட்டன என சொல்லுவதற்கில்லை..வருவதேயில்லை. சற்றுமுன் வந்து தமிழ்மணத்தில் ஏகத்துக்குக் கிழிக்கப்பட்ட குசேலன் போன்ற மொக்கைப்படங்களும், விஜய், ஜெயம்ரவி பாணி மசாலாப் படங்கள் தான், தழுவல் படங்களின் அடையாளங்களாக உள்ளன. 'மூடுபனி', 'ஜுலிகணபதி' போன்ற படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவலாக இருப்பினும், நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் திரைக்கதையை கௌதம்மேனன் அட்சரம் பிசகாமல் ஆங்கிலப்படத்திருந்து சுட்டுவிட்டு, மற்றவர் படங்களை (பொல்லாதவன்) குறை கூறிக்கொண்டு திரிகிறார். 'அஞ்சலி'க்குப் பிறகு ஒரு படம் கூட குழந்தைகளை மையமாகக் கொண்டு தமிழில் வரவேயில்லை.

********************

நான் சமீபத்தில் பார்த்த மற்றொரு ஆங்கிலப்படம் "Zulu". ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் காலனிஆதிக்கம் செலுத்தியபோது, ஜுலு என்ற ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் ஏற்படும் போர் குறித்த உண்மைச் சம்பவம் தான் கதை. இதோ இப்படத்திற்கான youtube இணைப்பு. தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

Zulu Trailer



திகில் படவரிசையில் சாகாவரம் பெற்ற 'Rosemary's baby' படத்தையும், Sergio leone இயக்கத்தில் வெளிவந்த "A fistful of Dynamite" என்ற western genre படத்தையும் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது, அது பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொள்வோம்.

New Page 1

புரட்சி பற்றி 'A fistful of dynamite' படத்தில் வரும் ஒரு வசனம். பின்னணியில் Ennio morricone-ன் இசை தவழ்ந்து கொண்டிருக்கிறது.




***********************