Friday, April 26, 2013

கவுண்டமணி கேள்வி பதில்ஸ்


கவுண்டமணி கேள்வி பதில்ஸ் 

திமுக - தேமுதிக கூட்டணி பற்றி உங்கள் கருத்து?
வடிவேலு, மதுரை

 
ஜப்பான்ல என்னை ஜாக்கிசான் கூப்பிட்டாக, நான் போலாமா? 
சரளா, கோவை
இங்க பிச்சை எடுத்தது பத்தாதுனு சப்பானுல போயி பிச்சை எடுக்க போறியா. போ. அப்படியே சப்பான் பாசையிலே நாலு வார்த்தை அள்ளிவுடுரேன். கப் கப்னு புடிச்சிக்கோ.


எனக்கு வழுக்கை என்பதால் என் மனைவிக்கு  என்னை கிண்டல் செய்கிறாள்? ……ஓமகுச்சி நரசிம்மன், சைதாபேட்டை
…டே சைதாபேட்டை மச்சான். சைத்தான் கி பச்சா. எண்டா அம்மிகல் தலையா! உன்ன கிண்டல் செய்யாம சுண்டலா செயவாங்க. டே ஏழுமசுரு மண்டையா! இன்னொரு தடவ கேள்வி கேட்டுகிட்டு வந்த செருப்பால பிய்யபிய்ய அடிச்சிடுவேன்...... ஒடிப்போயிடு.... கொசுத்தொல்லை தாங்கமுடியல நாராயணா!

கக்கூஸுல காட்டெருமை புகுந்த மாதிரி கமலஹாசன் கொடுத்த முத்தத்தைப் பத்தி குஜாலா கோக்குமாக்கா எதாச்சும் தட்டி விடுங்க?
வெண்ணிற ஆடை மூர்த்தி, பூலாம்பட்டி 


அடே கழுதவாயா! உனக்கு உதாரணம் சொல்ல வேற  எதுவும் கிடைக்கல.
அந்தாளு சினிமாவிலேயே ஒருத்திவிடாம மொச்சுமொச்சுனு முத்தங்கோடுப்பான்.  கேப் கிடைச்சா ஜட்டி கூட போடுவான். இவனுங்களும் திருந்தமாட்டானுங்க, நம்மளயும் திருந்தவிடமாட்டாணுங்க. வைக்கபோருல நாய் படுத்த மாதிரி.
******************************************************************************** 
இயக்குனர் பேட்டி
சில நாட்களுக்கு முன் இண்டர்நெட்டில் பாக்யராஜ், மணிவண்ணன் அவர்களின் நேர்காணல்களை காண நேரிட்டது. பாக்யராஜ் அவருக்கு தோன்றியதை எதார்த்தமாகச் சொல்லியிருந்தார். அவற்றுள் ஒன்று:
…#ஒரு இயக்குனரோ, கதாசிரியரோ உருவாக்கக் கூடிய படைப்பிற்குத் தேவையான விஷயங்கள் இரண்டுவிதமாக கிடைக்கலாம். ஒன்று, தேடல், ஆராய்ச்சியின் மூலமாக கிடைக்கும் தகவல்கள். இரண்டு, அனுபவத்தின் மூலமாக நம்மையறியாமல் நமக்குள் பதிந்துள்ள விஷயங்கள். இவற்றுள் இரண்டாவது வகையை வைத்து படைப்பை உருவாகுவது சுலபம்.
…(என்னைப் பொருத்தவரை, இரண்டுமே வேறுவேறு பாதைகள். தமக்குள் பதிந்துள்ள நினைவுகளை ஆக்கங்களாக உருவாக்குபவர்களுக்கு ஒரு சமயத்திற்கு மேல் விஷயம் தீர்ந்துவிடும். ஆனால் அவ்வாக்கங்களில் குறைந்தது ஐம்பது சதவிகிதமேனும் உண்மை இருக்கும். …இதற்கு முரணாக, முதலாவதாகச் சொல்லப்பட்ட தகவல் ஆராய்ச்சி சார்ந்த படைப்புகளுக்கான விஷயங்கள் தீராது. ஆனால் அப்படைப்புகளில் செயற்கைத்தனம் மிக அதிகமாக இருக்கும்.)

மணிவண்ணன் பேச்சில் அவரது போலித்தனம் நன்றாகவே தெரிந்தது. 
# நான் தாடி வச்சிகிட்டு ஒரு போட்டோ எடுத்தேன். அப்படியே கார்ல்மார்க்ஸ் மாதிரியே இருப்பேன்.
#… சேகுவேரா கதையை தமிழில் டைரக்ட் பண்ணும்னு ஆசை. என் மகன் தாடி வச்சா அப்படியே சே மாதிரியே இருப்பான்.
…# வேறுபடங்களைக் காப்பியடிப்பது தவறில்லை. இந்த காலத்து இயக்குனர்கள் வேற்றுமொழிப்படங்களை காப்பி அடிப்பது தவறு என்றால், கம்பன் செய்தது என்ன?
(கம்பர் ராமாயணத்தோட தமிழ் வெர்ஷனை எழுதினார். பெயரும் ராமாயணம் என்று தான் பெயர் வைத்தார். கதாபாத்திரங்களுக்கும் அதே பெயர்கள் தான். தமிழ்ப்பட இயக்குனர்கள் காப்பி மட்டும் அடிப்பதில்லை, தன்னால் உருவாக்கப்பட்ட கதை என்றே போட்டுக்கொள்கிறார்கள். உண்மையான கதாசியருக்கு காசு கொடுக்காட்டி கூட பரவாயில்லை. பெயரைக் கூட போடமாட்டார்கள். மணிவண்ணன் இப்படி பொங்குவதற்கும் காரணம் இருக்கிறது. மணிவண்ணனுடைய நூறாவதுநாள் திரைப்படம் Seven black notes  என்ற இத்தாலிய திரைப்படத்தின் ஈயடிச்சான் காப்பி. எனக்குத் தெரிந்து இது ஒன்று. தெரியாமல் எத்தனையோ? இதை என்றாவது இவர் வெளியில் சொல்லி இருப்பாரா? இந்தியில் வேறு இந்தப்படத்தை பெருமையாக இயக்கினார். அப்பாவிப் பெண்ணுக்கு அல்வா கொடுக்கும் காட்சியை விலாவாரியாக எடுக்கும் இயக்குனர், சேகுவேரா படம் எடுத்தால் எப்படி இருக்கும்.)
இவர் போன்ற, சீமான் போன்ற ஆட்களை இன்னும் ஈழத்தமிழர்கள் எப்படித்தான் நம்புகிறார்களோ?
******************************************************************************** 
தமிழ்க் குறிப்பு 
தமிழில் வேறுவேறு குடித்தலுக்கான வினைகள்
குடி - வேகமாக குடிப்பது (எ.கா. தண்ணீர் குடி)
பருகு - கொஞ்சம்கொஞ்சமாக குடித்தல் (எ.கா. பால் பருகு)
அருந்து - மிகவும் கொஞ்சம்கொஞ்சமாக குடித்தல் (எ.கா. மது அருந்து)
……உண்ணுதல் என்றால் உட்கொள்ளுதல். "கள்ளுண்ணாமை" என்ற பதத்தில் கள் என்ற திரவப்பொருளுக்கும் உண்ணுதல் என்ற வினையை பயன்படுத்தியுள்ளார் திருவள்ளுவர்.
***********************************************************************************

Monday, April 22, 2013

அம்மா ஞாபகம்

நான் நான்காம் வகுப்பு என் அம்மா பணிபுரிந்த பள்ளியிலேயே படித்தேன். மதிய உணவு இடைவேளையில் அம்மா மற்ற ஆசிரியைகளுடன் இருந்து உண்பார்கள். நான் சாப்பிட்டவுடன் நண்பர்களுடன் விளையாடப் போய்விடுவேன். பள்ளியின் அருகில் இருக்கும் பெரிய பஜாரில் ஓடித்திரிந்து விளையாடுவோம். மீன்கடை, கோடவுன், காய்கறிக்கடை, அனுமன் கோயில் என ஒரு இடம் விடுவதில்லை எல்லா இடத்திலும் சுற்றிச்சுற்றி விளையாடுவோம்.  விளையாடியபின் Hotel பாலாஜிபவனில் தண்ணீர் குடித்துவிட்டு, அனுமன் கோயிலில் முகம் கழுவிக் கொண்டு, முடிதிருத்தும் கடையில் தலைசீவிக் கொண்டு வகுப்பிற்குச் செல்வோம். வழக்கம்போல் அன்று அப்படி விளையாடிவிட்டு வகுப்புச் செல்கையில், போகும்வழியில் எல்லா மாணவர்களும் பள்ளியைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ஸ்ட்ரைக் எதாவது இருந்தால் பள்ளி விட்டவுடன் பையோடு தான் ஓடுவார்கள். எல்லோரும் வெறுங்கையோடு கத்திக்கொண்டும் கதறிக்கொண்டும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஏன் ஓடுகிறார்கள் என்று யாரைக்கேட்டாலும் பதில் கிடைக்கவில்லை. நான் ஓடிச்சென்று பள்ளி இருக்கும் தெருமுனையில் நின்று பார்த்தேன். பள்ளியின் கூரை முழுவதும் ஒரு ஆள் உயரத்திற்கு எரிந்து கொண்டிருந்தது. நான் முன்பின் பார்த்திராத தீவிபத்து. பள்ளியில் இருந்த அம்மாவின் ஞாபகம்! எரிந்து கொண்டிருந்த பள்ளியை நோக்கி ஓடினேன். அங்கிருந்த சிலர் தீ பெரிதாக இருப்பதால் என்னையும் மற்ற மாணவர்களையும் பள்ளியின் அருகே நெருங்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தார். என் அம்மா பள்ளியில் இருப்பதாக அழுதுகொண்டே ஒருவரிடம் சொன்னேன். பள்ளியில் யாரும் இல்லை, எல்லோரும் வெளியேறிவிட்டனர், நீ போய் தொலைவாக நில் என்று மறுபடியும் விரட்டினார். எரியும் பள்ளியைப் பார்த்தவாறே நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். அம்மா ஒரு வீட்டில் நின்று, என்னைக் காணவில்லை என்று மற்றவர்களிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார். அப்போதுதான் எனக்கு நிம்மதி வந்தது. நான் அருகே சென்று அம்மா என்றதும், என்னைப் பார்த்த உடனே என் கன்னத்தில் அறை ஒன்று விட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

நம் ஆழ்மனதில் இருப்பவை தான் கனவாக வருகின்றன என்பார்கள். சிறுவயது கனவுகள் நாம் பார்த்த சற்று மோசமான உருவங்களாக இருக்கும், கேட்ட பேய்க்கதைகளின் சிந்தனைகளாக இருக்கும். எனக்கு என்னதான் என் பாட்டி பேய்க்கதைகள் சொன்னாலும் நான் உறங்கும்போது பயப்படுவதில்லை.

இப்போது வேலூர் மாவட்டத்தில் அவ்வளவாக மழை பெய்வதில்லை. ஆனால் சுமார் இருபது வருடங்களுக்கு முன் பருவ மழைகள் காலம் தவறாமல் பெய்யும். அவ்வாறு பெய்யும் போது, என்னுடைய அம்மா வீட்டின் வராண்டாவில் கொடிகட்டி துவைத்த சேலைகளைக் காயப்போடுவாங்க. நிறைய சேலைகள் தொங்கிக் கொண்டிருக்கும், அதனிடைய நான் தனியாக ஓடி விளையாடிக் கொண்டிருப்பேன். அன்றிரவு அதுவே கனவாக வரும். நான் சேலைகள் நடுவே ஓடிக்கொண்டிருப்பேன். சேலைகள் இடையே என் அம்மாவைத் தேடிக்கொண்டிருப்பேன். என்னுடைய அம்மாவின் குரல் கேட்கும், ஆனால் என்னால் கண்டுபிடிக்க இயலாது. எங்கு பார்த்தாலும் சேலையாக இருக்கும். வெளியே வர வழியே இருக்காது. இன்றுவரை இக்கனவு எனக்கு எப்போதாவது  வருவதுண்டு. அப்படி வந்தால், வட இந்தியாவின் ஏழு டிகிரி  குளிர்காலத்தில் கூட உடல் வேர்த்து நனைந்துவிடும்.  எல்லோரையும் போல என் தாய் மீது எனக்கு மிகுந்த பாசம். நான் சிறுவயதில் என் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு கதைக்காமல் இருந்தேனானால், என்னை கதைக்க வைக்க அம்மாவிடம் ஒருவழி இருந்தது. 'நீங்கள் கேட்டவை' படத்தில் வரும் " பிள்ளைநிலா இரண்டும் வெள்ளைநிலா" , 'தாயிக்கொரு தாலாட்டு' படத்தில் வரும் "ஆராரிரோ பாடியதாரோ" பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் பசுவிடம் ஓடும் கன்று போல ஆகிவிடுவேன். என் தாயின் பிரிவிற்குப் பிறகு, இப்பாடல்களை கேட்பதற்கே எனக்கு பயம். என் மனைவி கேட்க விரும்பினால் Headphone-ல் கேட்கச்சொல்வேன்.

P S வீரப்பா - படக்காட்சிகள்