Showing posts with label டுபாக்கூர். Show all posts
Showing posts with label டுபாக்கூர். Show all posts

Tuesday, December 18, 2007

கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதாவையும் தேடியது யார்?

கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதவையும் தேடியது யார்? விடை கீழே உள்ளது.

கூகிள் தளத்தில் இந்தியர்கள் அப்படி என்னதான் தேடினார்கள் என்ற முடிச்சை கூகிளே அவிழ்த்துள்ளது.

கடந்த வருடத்தில் தேடலில் முதலிடம் வகிப்பது: ஆர்குட் (orkut)
அதிகமாக தேடப்படும்...விளையாட்டு நட்சத்திரம்: சானியா மிர்சா
அரசியல்வாதி: காந்தி

"Sex" என்ற வார்த்தையை அதிகமாகக் கொடுத்துத் தேடும் இணைய அன்பர்கள் உள்ள நாடுகள் முறையே எகிப்து, வியட்நாம், இந்தியா, துருக்கி (நம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல!!). "Movie online" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது! ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. "Kashmir" என்று தேடுபவர்கள் இந்தியர்களை விட பாக்கிஸ்தானியர்களே அதிகம்(எவ்வளவு அக்கறை பாருங்க அவங்களுக்கு, நீங்களும் இருக்கிங்களே!!). "terrorism" என்று அதிகம் தேடுபவர்களும்் பாகிஸ்தானியர்கள் தான். "USA" என்று தேடுபவர்கள் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் (இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? USA-ஐ அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் அதிகம் நேசிக்கிறார்கள் போலும்). கூகிள் தளத்திலேயே "google" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான். "Tsunami" என்று முறையே இந்தோநேசியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா வாழ் இணைய அன்பர்கள் அதிகமாக தேடுகிறார்கள். "Job" என்று தேடுவதிலும் இந்தியர்களுக்குத்தான் முதலிடம்.

மேலும் ஒரு தகவல் என்னவென்றால், "periyar" என்ற தேடல் 2006-ன் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது. இதற்குக்காரணம், பெரியார் திரைப்படம் அல்லது பெரியார் சிலையுடைப்பு காரணமாக இருக்கலாம்.

கொசுரு செய்தி: "Bhavana" என்ற பெயரை இந்தியர்கள் தேடுவதை அடுத்து, UAE-லிருந்து தான் அதிகமாக தேடப்படுகிறது.(தம்பி உமாகதிர் UAE-ல தான் இருக்கிறார் என்பதை வாசகர்கள் மறக்கக்கூடாது :) ).

"Namitha" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள்? குறிப்பாக கொழும்பில் தான்! உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் :)) ).

"Sivaji" என்று இந்தியாவை விட இலங்கையிலிருந்து தான் அதிகமாக தேடப்பட்டுள்ளது. (இதுக்கு என்ன சொல்லுரிங்கோ??)

நீங்களும் சமத்தா Google trends-ல போய் தேடிப் பாருங்க.

Friday, June 15, 2007

பொன்ஸ் அக்கா - அலெக்ஸாண்டர் - மறுவெளியீடு

என்னுடைய முந்தைய பதிவில்் பொன்ஸ் அக்கா சொன்ன அறிவுரை!!!

//
பிசாசு,

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இந்தப் போருக்குப் பின்னால போரஸ் தன்னோட மகளையோ தங்கையையோ அலெக்ஸாண்டிருக்குக் கட்டி வைப்பாருன்னு நினைவு.. இத வச்சி உங்க தமிழைய்யா ரீமிக்ஸ் பண்ண முயன்றிருப்பாரு..

//

நம்ம திரையுலக வல்லுனர்களிடம் கிடைத்தால் எப்படி சின்னாபின்மாகி இருக்கும்! வாங்க தைரியமா பார்ப்போம்!!

(1) பி.வாசு டைரக்ஷன்-ல பாசமலர் இரண்டாம் பாகம் வெளிவருகிறது, அதுல பாசத்தை புழியமாதிரி ஒரு சீன் வச்சி இருக்காரு! தாய்க்குலம் எல்லாம் கன்ணுல தண்ணீ வச்சிக்கும். அப்படி ஒரு சீன்! நம்ம நடிகர்திலகம் தான் போரஸாக நடிச்சி இருக்கணும். அவரு இல்லாததுனால இளைய திலகம் பிரபு நடிக்கிறார். அலெக்ஸாண்டராக ‘தமிழக பெருச்சாளி’ சாரி! ‘தமிழக புரூஸ்லீ’ தனுஷ் நடிக்கிறார். (ஒரேஒரு ப்ராப்ளம் அடிக்கடி ஹெல்மெட் இறங்கி கண்ணை மூடிக்குதாம்.வேறவழியில்ல இப்ப தான் ஹெல்மெட் கட்டாயமாச்சே!!) நாயகி எதோ மும்பை நடிகையாம்.

(தாய்க்குலம் கண்ணீர் வச்சிக்கும் காட்சி)

போரஸ்: அலெகஸ்.. என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்! அதுல ஆனந்தகண்ணீர் தான் வரணும்!

அலெக்ஸாண்டர்: மாமா! ஆனந்தகண்ணீர்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க!!

போரஸ்: எதுடா பெரிய வார்த்தை! ஆனந்தகண்ணீர் தம்மாதூண்டு வார்த்தை.

(வரலாற்றுக்காட்சிகள்)

வரலாற்றுக்காட்சிகள் நிச்சயம் இருக்கணும்னு சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

கல்யாணத்தில் ஓரமாக நின்று செலுகஸ்(அலெக்சாண்டரின் தளபதி) மொய் வசூலிக்க, சாண க்கியர் மொய்ப்பணம் 101 பொற்காசு!னு சாணக்கியர் க்யூவில் நிற்க, சந்திரகுப்தன் பந்தில உட்காந்து வடை பாயசத்தோட சாப்பிட்டு கைய நக்கிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த போரஸான பிரபு என்ன கொடுமை அலெக்ஸ் இது! மொய்யே எழுதாமே இந்த கட்டு கட்டுரான் என்கிறார்.

ஜீலம் கரையோரமா ஒரு குத்துப்பாட்டு வேற இருக்காம். போர்ல செத்துட்டது தன்னோட ஆட்கள்னு தெரியாம தனுஷ் சாவுக்கு ஆடுற ஆட்டம் கண்டிப்பாக ஹிட் ஆகுமாம்.

(2) விஜய டி. ராஜேந்தர் தங்கைக்கோர்கீதம்-இரண்டாம் பாகம் அஷ்டாவதானியாக டைரக்ஷன்,நடிப்பு(அடப்பாவி நடிப்பா?),இசை,ஒளிப்பதிவு,கலை,பாடல்கள்,வசனம்,திரைக்கதை அவரே!

(டிஆர் பிராண்ட் வசன்ங்கள்)

கத்திப்பேசதடா! பேசினா என் கத்தி தான் பேசும்டா!!

டேய்! அலெக்ஸு ரிலாக்ஸு இல்லாட்டி நீ க்ளோஸு பிறகு கேட்காத ப்லீஸு

யே டண்டணக்கா டணக்குணக்கா!!!

(ஒரு உருக்கமான சீன்)

டிஆர்: இதும்மாதங்கச்சி! ஒரு ஆம்பிள வாழ்க்கையில வழுக்கினால், சமையல்கட்டுல பூனை வழுக்கின மாதிரி, ஆனா ஒரு பொண்ணு வாழ்க்கையில வழுக்கினா போர்க்களத்தில யானை வழுக்கின மாதிரிம்மா…!!

இந்த கேடயத்தையும் கத்தியையும் எடைக்கு போட்டாவது, இந்த அண்ணன் உன்னோட கல்யாணத்த நடத்திவைப்பாம்மா!!

(3) சும்மா இருப்பாரா நம்ம எஸ்.ஜே.சூர்யா, candom -னு ஒரு படத்தை ரீலீஸ் பண்ணிட்டாரு!! என்ன அது அசிங்கமா காண்டம்னு கேட்டா! அது யுத்த காண்டம் சொல்லுராரு

அலெக்ஸாண்டர் தளபதியோட ஓரினசேர்க்கைல ஈடுபடுறபோல ஏகப்பட்ட கசமுசா சீனாம். இதைப்பார்த்து சென்ஸார் கத்திரிப்பாய்ச்ச, எடுத்த எல்லாம் கட்டாகி மிச்சசொச்ச பில்ம் எல்லாம் தீப்பெட்டில போட்டு குடுத்துடாங்கலாம். டென்சனான எஸ்ஜே அந்த தீப்பெட்டியால அதிகாரி மண்டைய உடைச்ச கேஸ் இன்னும் நடக்குது.

(4) மணிரத்னம் இருவர்- இரண்டாம் பாகம் எடுத்து முடிச்சிட்டார். அதுல வர 5 நிமிட போர்க்கள காட்சி ரொம்பவே பேசப்படுமாம். ஜோ-னு(சிம்ரன், த்ரிஷா-னு எல்லாம் மழை பெய்யாது) மழை பெய்யுது. இந்த பக்கம் போரஸ், அந்தபக்கம் அலெக்ஸாண்டர். மாத்திமாத்தி காட்டுராங்க! ரெண்டு பேரும் கொட்டுர மழைல பேசிக்கிறாங்க,

போரஸ்: எதுக்கு இந்த போர்!

அலெக்ஸ்: வேண்டாமா!

போரஸ்: ஆமா!!

அலெக்ஸ்: ஏன்!!

போரஸ்: நிறுத்துங்க! எல்லாத்தையும் நிறுத்துங்க!!

அலெக்ஸ்: சரி!

செலுகஸ்: யோவ்! ஒன்னுமே புரியலயா! நீங்க முதல்ல பேசுரத நிறுத்துங்கய்யா!!

(சிறப்புக்காட்சி)

அலெக்ஸாண்டர்: (போரஸ் படையைப் பார்த்து...) ஐயரே! அது என்னய்யா! கருப்பா ஒசரமா எருமைமாடு மாதிரி!

ஐயர்:அது யானை!

அலெக்ஸாண்டர்: ம்ம்ம்யானை எவ்வளவு இருக்கும்

ஐயர்: சுமார்! ஒரு 1000 பொன் இருக்கும்

அலெக்ஸாண்டர்: 10 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 10 யானை!!!!சுமார் 10000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: 1 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 1 யானை! 1000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: யானை வாயில இருக்கே! அது என்ன?

ஐயர்: கரும்பு!!

அலெக்ஸ்: அது எவ்வளவு ஆகும்!!

ஐயர்: 1 கரும்பு ! சுமார் 1/2 பொன் ஆகும்.

அலெக்ஸாண்டர்: ஆகட்டும் எவ்வளவுனா ஆகட்டும்!! வாங்குரோம்! 10 கரும்பு வாங்குரோம்! வாங்கி ஜூஸ் போட்டு குடிக்கிறோம்! அது கிரேக்கருக்கு மட்டும் தான்! வேற எவனுக்கும் இல்ல!

பின்னணி இசை ஓவென்று சத்தமெழ பாடல்

Greece சீமையிலே

Horse ஓட்டும் வீதியிலே

Force-ஆக வந்தவனே

போரஸை அடிப்பாயோ!

போரஸை அடிப்பாயோ!

பி.கு.: உப்புமா கிண்டினது போதும் போடனு எங்க கண்மணி அக்கா திட்டுர மாதிரி இருக்கு! இதுக்கு மேல போனால் எங்க பாசக்கார மகளிரணி பட்டைய கிளப்பிடும்! வரட்டா!!!

Sunday, June 03, 2007

நிறைய எழுதணுங்க!!

எங்க பாசக்கார டீம்ல: கண்மணி அக்கா போல டைமிங் காமெடி செய்து சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரமாரியாக எழுதித்தள்ளுகிறார். காயத்ரியோட கவிதைகளைப் பார்த்த பொறாமையாக இருக்கும். கருத்து மற்றும் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கும். (அவர் இயற்கை, உறவுகள் என்று எல்லையோடு நிற்க்காமல் சமூக சிந்தனைமிக்க கவிதைகளையும் எழுதவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்). மங்கை ரொம்ப நல்லா எழுதுவாங்க. ஆனா அவங்க எழுதுரது குறைவு. எங்க அபிஅப்பா எழுதினார்ன்னா நக்கல்-நையாண்டிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவர் சாமியாராக போனதில் இருந்து எழுதுரது குறைந்துவிட்டது. அய்யனார் சாதாரண விஷயத்தக்கூட அழகாக சொல்லக்கூடியவர். மொழியைப் பயன்படுத்தும் லாவகம் அலாதியானது. மைபிரண்டும் கண்மணி அக்கா போல காமெடிப் பதிவில் கில்லாடி. மின்னுதுமின்னல் பதிவ விட பின்னூட்டம் நல்லா எழுதுவார்( மின்னல் கோபிக்காதே! சும்மா தான் சொன்னேன். நீங்க எழுதுன மொக்கைகவிதை ஒன்று போதும் உங்களுடைய திறமையைக் கூற! ஆனால் தொடர்ந்து எழுதுங்க!).

எல்லாரபத்தியும் சொல்லிட்டு என்னை விட்டுடமாட்டேன். வழக்கம்போல நம்ம கமலஹாசன் பாணியில் ஒரு கவிதை, ஒரு மொக்கை, ஒரு திரைபார்வை, ஒரு ஆக்கம் என்று வரிசைபடி இடுகையிட்டு வருகிறேன். (கவிதை பற்றி சொல்லவே தேவை இல்லை. யாரும் படிக்காவிடிணும், என்னோட பதிவுக்கு த்ருஷ்டி கழிச்சதுபோல எப்போதாவது ஒன்று எழுதிவிடுவேன். ஏன்னய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை என்று கேட்டால், “நான் முடிவுபண்ணிட்டா! என் பேச்ச நா..னே.. கேக்க மாட்டேன்!” விஜய் ஸ்டைல்ல டயலாக் அடிப்பேன். எனக்கு இனிமேல கொலை வெறியோட பின்னூட்டம் போட்டு திட்டினாலும், நிறுத்துறது கஷ்டம் தான்.) பின்னவீனத்துவம்னு நான் எதுவும் தெரியாம அகலக்கால் வைக்கிறது இல்லை. சாதாரணமாக ஆக்கமான இடுகைகளை விட மொக்கைக்கு தான் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. அதிலும் என்னுடைய சில ஆக்கமான இடுகைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் போதிய பின்னூட்டம் இல்லாததால், வகையான இடுகைகளை எழுதுவதைத் தவிர்த்தேன். ஏனென்றால் பின்னூட்டம் இருந்தால்தான் இடுகை போதியநேரம் தமிழ்மணத்தில் தெரிகிறது, இல்லாவிடில் மறைந்துவிடுகிறது. இவற்றால் நொந்துபோன நான் மொக்கைபதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். எங்க பாசக்கார குடும்ப ஆலோசகர் ‘தருமி’ ஐயா சொன்னதுபோல பின்னூட்டமும், ஆக்கமும் தொடர்பில்லாத இருவேறு விஷயங்கள. அவருடைய அறிவுரைக்கு செவிசாய்த்து என்னுடைய பாதையை மறுபடியும் தொடர முடிவு செய்துவிட்டேன். இத்தகைய நிலை எனக்கு மட்டும் இல்லை, நிறைய தமிழ்மண அன்பர்களுக்கு நிகழ்ந்திருக்கும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்.அறிவுரையும் சொல்லலாம்.

எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! இதுக்கு முக்கிய காரணம் தமிழ்மண ஜாம்பவான்கள் தான். என்னோட எழுதனும் என்கிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தவர்கள். இவர்களுடைய பதிவுகள்தான் எனக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. நான் இன்னும் நிறைய படிக்கணும்...மேலும் மேலும் எழுதணும்... தங்கள் வாழ்த்துக்களுடன்...

பி.கு.:

தமிழ்மணமே! என்னோட கண்ணான பாசக்கார குடும்பத்தை உன்னிடம் ஒப்படைச்சிட்டு போரேன். அதில் ஆனந்தகண்ணீரத்தான் நான் பார்க்கனும்!! ஐயோ!!!ஊருக்குத்தான் போரேனுங்க...! ஒரேடியா போகலை..!!