Thursday, August 28, 2008

கலைஞரின் தெளிவான பதில்கள்!

இடம்: டீக்கடை

சிண்டு: அண்ணே! இன்னைக்கு என்ன சேதியா வந்து இருக்கு!

அண்டு: உற்சாகமா Sultan the warrior வருதாம்.

சிண்டு: என்ன இது! சுல்தான் கழுத்துல கொட்டை கட்டிகிட்டு இருக்காரு, விட்டா பட்டையும் நாமத்தயும் போட்டு பண்டாரமாக்கிடுவிங்க போல.

(கலைஞர் டீக்கடைக்கு வரார்!)

அண்டு: உளியின் ஓசை தொபக்கடீர்னு ஊத்திகிச்சாமே?

கலைஞர்:

சுள்ளான் முதல் சுட்டபழம் உள்ளிட்ட

எல்லா மொக்கைக்கும் சூடான பதிவிடும்

கழகத்தின் பதிவுலக போர்வாள் 'லக்கி'

'உளியின் ஓசை' பற்றி பதிவிடாத

காரணத்தால்தான் ஊத்திக்கொண்டது.

சிண்டு: கலைஞர் ஐயா! இலங்கை தமிழர் உரிமை காக்க உங்க கைவசம் எதாச்சும் திட்டம் இருக்கா?

கலைஞர்:

வசனங்கள் மொக்கையாகப் போனாலும்,

அடுத்த வாய்ப்பு தக்கையாகிப் போகாது!

ஈழத்திற்காக என் இன்னலையும் மீறி,

உளியின் ஓசை போன்றதொரு

உன்னதகாவியம் படைக்க உள்ளேன்!

அண்டு: ஈழத்தமிழருக்கு பிரச்சனை தீர்க்கப்போறேனு, உலகத்தமிழர்களையே கொடுமை படுத்த கெளம்பிடுவிங்க போல!

சிண்டு: தமிழ்...தமிழ்...என்று எப்பவும் பேசுற உங்களோட பொண்ணு கவுஜப்புயல் கனிமொழி, காபி வித் அனு என்று ஒரு தமிழ் சானலில் வரும் நிகழ்ச்சியில், இங்கிலிபீசுல மட்டுமே பேசி வெளுத்தாங்களே, அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

கலைஞர்:

ஆங்கிலம் அறியாமல்

மத்திய அமைச்சர் ஆவது எங்ஙனம்

மச்சானுக்கு ஒரு வாய்ப்பு

மருமகனுக்கு ஒரு வாய்ப்பு

மகளுக்கு ஒரு வாய்ப்பு

சிண்டு: நீங்க சமீபத்தில் பழ.நெடுமாறனைப் பற்றி காரசாரமாக கவிதை எழுதி திட்டுரிங்களே! என்ன விடயம்?

கலைஞர்:

உடன்பிறப்பே! கேளாய்!

ஞாநி என்ற கோணி 'ஓ' போட்டு

எழுதிய ஒட்டடைகளை மறுமொழிந்த மடையன் அவன்!

மனைவிகள் ஆயிரமாயிரம் கட்டிய தசரதனை,

மூன்றுமனைவிகள் கட்டிய அடியேனுக்கு ஒப்பிட்டமூடன் அவன்!

தமிழர்குடி கெடுத்த குடிகார இராமனை,

என் குலக்கொழுந்துடன் ஒப்பிட்ட கூற்றுவன் அவன்!

நான் எழுதிய கவிதை ஓர் உறைகல்!

உண்மையைத்தான் கூறும்.

அண்டு: இதுக்கும் கவிதையா! நீங்க சொன்னது உறைகல்லோ கடப்பாகல்லோ தெரியாது. ஆனால் அவர் கூறியது உண்மை தானே! நீங்களும் அக்பர் போல ஆட்சியவிட்டு போக மாட்டீங்க போல... உங்க பசங்களும் ஜஹாங்கீர் போல அப்பன் எப்ப...திண்ணை எப்ப காலியாகும்னு காத்துகிட்டு இருக்காங்க.

கலைஞர்: *****************(Censored)

அண்டு: சிண்டு!!! டோட்டல் பேமிலி டேமேஜ்! இன்னும் பச்சையாக திட்டுரதுக்கு முன்னாடி எஸ்கேப்!!!

3 comments:

  1. கலக்கல் நையாண்டி போங்கள்

    ReplyDelete
  2. நகைச்சுவையை ரசித்தேன்:-)

    ReplyDelete
  3. உருப்படாதது,

    நன்றி!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய