Tuesday, December 15, 2009

Change in democracy



    Always the change is misunderstood in democracy.

தெலுங்கனாவை தனிமானிலமாக காங்கிரஸ் அரசு அறிவித்தபின் ஆந்திராவில் பெரும் அமளியை உருவாக்கியுள்ளது.

    It is a false choice.

தெலுங்கானாவை தனியாக பிரிப்பதால் சந்திரசேகரராவுடன் கூட்டணி அமைத்து தெலுங்கனாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஆந்திராவில் இருந்து எதோ தெலுங்கனா பிரிந்தால் பொதுவுடைமை ஆட்சியா மலரப்போகிறது. அப்போதும் இதே காங்கிரஸ் கும்பல் தான் திருடப்போகிறது. சினிமாவையே ஜாதிரீதியாக ஆந்திராவில் பார்க்க ஒரு பெரிய கூட்டம் உண்டு. இந்த விடயத்தில் எப்படியோ? திருப்பதி நாமகாரருக்குத் தான் வெளிச்சம்.

    We're not perfect, but we do have democracy - Hugo Chavez


**************


காரல்மார்க்ஸின் ஆதர்ச நாயகன் ஸ்பார்சகஸ் (Spartacus).கி.மு-வில் மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்த ரோமாபுரிக்கு ஒரு ஆச்சரியக்குறியாக வந்தவர் தான் ஸ்பாடகஸ். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளை வீரர்களாக்கி கட்டுக்கோப்பான ரோமாபுரிப் படையையே கதிகலங்கடித்தவர். நான்கு அகெடமி விருதுகளை வென்ற Spartacus 1960-ல் வெளிவந்த திரைப்படம். வரலாற்றுப்படங்களில் முக்கியமான படம். Kirk douglas (Basic instincts புகழ் Michaeldouglas -ன் தந்தை) அற்புதமாக நடித்து இருப்பார். ஒரு கூடுதல் தகவல். இந்தப் படத்தில் வரும் ஒரு சிறைச்சாலை காட்சியை அப்படியே விருமாண்டியில் கமல் சுட்டு இருந்தார்.


****************

Monday, November 02, 2009

அழகான ஸ்பானியப் படங்கள்



தமிழில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மொழியிலும் திகில் படங்கள் எடுப்பது மிகக் குறைவு. அப்படி ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும், ஜிவனற்ற முறையில் எடுக்கப்பட்டதாக இருக்கும். இதுவே அமெரிக்க திகில் படங்கள் என்றால் திரையில் இரத்தம் தெரிக்கும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் சகட்டுமேனிக்கு கேமெரா சுற்றிச்சுழலும். இப்படிப்பட்ட எந்த சாயலுமில்லாமல் ஐரோப்பிய படங்களும் ஜப்பானிய கொரிய படங்களும் திகில் வரிசையில் தனித்து நிற்கின்றன. கிளாசிக் படமாகவும்,திகிலாகவும் ஒரு படத்தை எடுப்பது கடினமான காரியம் தான். ஐரோப்பிய படங்களில் ஸ்பானியப் படங்களுக்கு தனியிடம் உண்டு. 

2006ல் வெளிவந்து மூன்று ஆஸ்கார்களை வென்ற Pan´s Labyrinth படம் ஒரே கதையமைப்பில் fairy tale போலவும் classic war genre போலவும் அமைந்திருந்தது. ஒரு குழந்தையின் பார்வையில் இரு தளத்திலும் கதை பயனிக்கும். அட்டகாசமான கிராபிக்ஸ், பிரம்மாண்டமான கலைவடிவம் என்றெல்லாம் கதையளக்கும் இந்திய திரையுலகம், இப்படத்தைப் பார்த்தேனும் கிராபிக்ஸ் காட்சிகளை எப்படி அளவோடு அழகாக காட்டவேண்டும் என்று கற்றுக் கொள்ளவேண்டும். 
 
1944 ஸ்பெனில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கட்படை போராடிக் கொண்டிருந்த காலம். ஒபெலியா தன் கற்பமான தாயுடன் தற்போது மணந்துள்ள தந்தையான கேப்டன் விடலிடம் செல்கிறாள். தேவதைகளின் கதைகளுக்குள் சுற்றித்திரியும் அவளது எண்ணத்திற்கு மென்மையான இடமாகவும் அது அமைகிறது. ஒரு இரவில் அவளை தேவதைகள் பாதாளகுகைக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு அவள் சந்திக்கும் faun அவள் பாதாளலோகத்தின் இளவரசி என்று கூறுகிறது. அவள் அந்த லோகத்திற்கு திரும்பிச்செல்ல மூன்று கட்டளைகள் இடப்படுகின்றன. சர்வாதிகார கும்பலுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நிகழும் இருண்ட கொடுமையான உலகிற்கும், ஒபெலியா தேடியலையும் மாய உலகிற்கும் மாறிமாறித்திரியும் கதை. இறுதியில் நிஜ உலகின் பிம்பங்களால் கசக்கியெரியப்பட்டு, இரத்தமயமான வலிகளுடன் பாதள உலகம் பயணிக்கிறாள் ஒபெலியா. இந்தப் படம் கேன்ஸ் விழாவில் திரையிட்டபோது பார்த்தவர்களின் கைத்தட்டல் அடங்க  22 நிமிடங்கள் பிடித்தது.

Saturday, October 31, 2009

படத்தழுவல்

Hansel and Gretel என்பது ஜெர்மானிய சிறுவருக்கான நீதிக்கதைகளுள் ஒன்று. இந்தக்கதையை சிறுவயதில் பள்ளி ஆசிரியர் சொன்ன ஞாபகம். சிற்றன்னையின் சதியாலும் உண்ண உணவில்லாததாலும் தந்தையால் காட்டிற்கு அனுப்பப்படும் இரு பிள்ளைகள் அங்கிருக்கும் சூன்யகார கிழவியிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அவளால் கொடுமைப்படுத்தப்படும் பிள்ளைகள் அவளைக் கொன்று தப்பிப்பது தான் கதை.

சமீபத்தில் இதே கதை அமைப்போடு ஒரு தென்கொரிய மொழிப்படத்தைப் பார்த்தேன். இதில் கதாநாயகனை சிறைபடுத்துவது குழந்தைகள். படத்தின் பெயரும் Hansel and Gretel தான். Misery என்று ஆங்கிலத்தில் வெளியாகி ஆஸ்கார் விருது பெற்ற படத்தின் தழுவல் இது. ஒரு எழுத்தாளர் மனம்பிறழந்த ஒரு பெண்ரசிகையிடம் மாட்டிக்கொண்டு தவிப்பதும், மேலும் அவள் கொடுமை அதிகரித்து ஒரு கட்டத்தில் அவளைக் கொன்றுவிட்டு வெளியெறுவதும் தான் கதை. ஜூலிகணபதி இந்தப் படத்தின் ஈயடிச்சான் காப்பி.


பேராண்மை படத்தை வினவு, மதிமாறன், சுகுணா ஏற்கனவே கிழிகிழினு கிழிச்சிட்டாங்க. நான் சொல்ல நினைத்ததை வினவு சொல்லிவிட்டதால், மேற்கொண்டு நானும் கிழிக்க விரும்பவில்லை. பேராண்மை படத்தில் ஜனநாதன் தன்னுடைய கதை என போட்டுக்கொண்ட At Dawn ist quiet here படத்தைக் காண இங்கே அழுத்தவும். படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்க நம்ம ஆளுங்க எப்படி கூத்தாடி கோலம் போட்டிருக்காங்கனு. ஒரு புரட்சிக்கான கதையை புரட்டி எடுத்து இருக்காங்க.