பதிவுலக நண்பர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு எழுத்தாளர் (சாரு) தனது சமீபத்திய இடுகையொன்றில் அவரைப் போன்ற விமர்சித்தே பேர் வாங்கும் ஒரு எழுத்தாளரை (ஞாநி) சரமாறியாக திட்டித்தீர்த்துள்ளார் (ஒரு வேளை விமர்சிப்பதில் போட்டியாக இருக்கும்).
விமர்சிக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்:
விமர்சிக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்:
\\
ஒரு வாரத்திற்கு முன்பு உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டாராம். (ஞாநியின் வார்த்தைகளிலேயே தருகிறேன்). அவருக்கு முன்னே அமர்ந்திருந்த 300 பேருமே ஏதோ ஒரு விதத்தில் உடல் ஊனமுற்றோர். அவர்கள் எல்லோருமே மாதம் 2000 ரூ. கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்பவர்கள். ’ லாட்டரி சீட்டு விற்று கூட பிழைத்துக் கொள்வோம்; அதற்கான ஒரு அடிப்படைப் பண உதவி தேவை’ என்பதே அவர்களுடைய வேண்டுகோளும் கோரிக்கையுமாக இருந்தது. நான் (ஞாநி) அவர்களிடம் சொன்னேன். நீங்களெல்லாம் மனுஷ்ய புத்திரனை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டும். அவர் கல்வி என்ற ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தார். இன்று தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த பதிப்பாளராக இருக்கிறார். அதே போல் நீங்களும் கல்வியைக் கற்று முன்னேறுங்கள். என்று அந்த ஊனமுற்றவர்களிடம் மனுஷ்ய புத்திரனை உதாரணம் காட்டிச் சொன்னேன். அந்த அளவுக்கு நான் (ஞாநி) மனுஷ்ய புத்திரனை மதிக்கிறேன். அவர் மட்டும் கல்வியைத் தன் கையில் எடுக்காமல் இருந்திருந்தால் அவரும் லாட்டரிச் சீட்டு தானே விற்றுக் கொண்டு இருந்திருப்பார்?
ஞாநியின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
\\
\\
அமெரிக்காவில் இருப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் ஊரில் ஒரு கறுப்பின மனிதனை நீக்ரோ என்று அழைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்? அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அவர் மனுஷ்ய புத்திரனின் தேக அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார். அது மட்டுமல்ல; கல்வி இல்லாவிட்டால் அவர் தெருவில் லாட்டரிச் சீட்டு விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று சொல்லி விட்டார். ஒரு தலித்தை அந்த சாதியைச் சொல்லித் திட்டும் ஒரு வார்த்தையால் குறிப்பிட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் தள்ள வேண்டும்.
\\
சாரு சார்! எதுக்கு இப்படி கோபப்படுறிங்க. ஒரு உதாரணத்துக்கு ஒரு தலித் மாணவனிடம் "அம்பேத்கார் கூட ஒரு தாழ்த்தப்பட்டவர்தான். அவரோட படிப்புதான் இந்தியாவில் அவரை ஒரு அறிஞராக அனைவரையும் ஒத்துக்கொள்ளவைத்தது. நீ நல்லா படிச்சா தான் அம்பேத்கார் மாதிரி வருவே!" என்று சொன்னால் தப்பா. இல்லை! இல்லை! அம்பேத்கார் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரை எப்படி எடுத்துக்காட்டாக கூறலாம் என்று உங்களால் கேட்க முடியுமா? "அம்பேத்கார் ஒரு தாழ்த்தப்பட்டவர்" என்று கேவலப்படுத்துகிறோம் என்று சொல்ல முடியுமா? அம்பேத்கார் எங்களுக்கு எப்படி ஒரு கலங்கரைவிளக்கம் போல இருந்தாரோ? அதுபோல மாற்றுத்திறனுடையவர்களுக்கு மனுஷ்யபுத்திரன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடாதா? அம்பேத்கார் கூட கல்வி தான் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த சரியான வழி என்று கூறியுள்ளார். இது மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் பொருந்தும்.
\\
உடல்ரீதியான பிரச்சினைகள் கொண்டவர்களின் துன்பங்கள் என்பது நம்முடைய நாட்டில் முழுக்க முழுக்க சமூகரீதியானவை. மொத்த அமைப்பும் அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஒதுக்கபட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதுதான் உணமை. இதற்காக அவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். நம்முடைய வீடுகள், பொது இடங்கள், போக்குவரத்து அமைப்புகள் யாவும் அவர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லவற்றையும்விட மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய சமூக மனோபாவம். ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்தை அடைந்தாலுல் அவருடைய சாதிய இழிவிலிருந்து எப்படி விடுபட முடியவில்லையோ அதேபோல மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் அவர் ஒரு குறைவுபட்ட மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார். அவர் பிற குறைவுபட்ட மனிதர்களுக்கு மட்டுமே ஒரு முன்னுதாரணம். இத்த்கைய பார்வை கொண்டவர்களுக்கு ஞாநி ஒரு சிறந்த உதாரணம். ஞாநி மனுஷ்ய புத்திரனிடம் காட்டும் மனோபாவம் என்பது அவரது சாதிய மனோபவத்தின் ஒரு நீட்சியே. அவர்களால் மனிதர்களை வேறு எப்படியும் பார்க்கவோ வகைப்படுத்தவோ முடியாது. வேண்டுமானால் யாராவது ஒரு பிராமணர் சங்க கூட்டத்தில் போய் ‘ சங்கரன்தான் நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்உதாரணம். உங்களுடைய சாதித் திமிரை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் ஒரு போலி ஜனநாயக, போலி முற்போக்கு முகமூடியையும் அணிந்துகொண்டு வெற்றிகரமாக உலா வரவேண்டுமானால் நீங்கள் ஞாநியை பின் பற்றுங்கள் ’ என்று உரையாற்றலாம்.
\\
அரசு ஒதுக்கப்பட்ட இடங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மக்கள் பங்கெடுக்க முடியாமல் இருப்பதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாமையும், கல்வியின்மையும், அரசின் மெத்தனமும் தான் முக்கிய காரணிகளாகும். (இங்கே அழுத்தி உலகமயமாக்கலுக்குப் பின் ஊனமுற்றோருடையநிலை பற்றிய பதிவை ப் படிக்கவும்)
ஞாநி சொல்லாத சாதி ஒன்றை நீங்களாகவே எடுத்துக் கொண்டு அவருடைய சாதி பற்றி பேசுரிங்க. இப்ப எல்லாம் முற்போக்காகக் காட்டிக் கொள்ள ஒரே வழி "சாதிதிமிர் என்று சொல்லிவிட்டு, அடுத்தவன் சாதியைப் பற்றி புறங்கூறுவது" . அதுவும் ஒரு வகை சாதித்திமிர் தான்.\\சாரு நிவேதிதாவாகிய நான் சுரணையற்றுப் போய் விட்டேன். மானம் கெட்டுப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அருவருப்பான, ஆபாசமான, அயோக்கியத்தனமான வசையை ஒரு ஆள் மனுஷ்ய புத்திரனின் மீது வீசும் போது கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டேன். தமிழ்ச் சமூகத்தைப் போலவே நானும் மானம் கெட்டுப் போய் விட்டேன். \\
சுரனை, மானம் எல்லாம் போச்சு சரி! நீங்க சும்மா இருந்ததுக்கு எதுக்கு தமிழனை இழுக்கிறிங்க. உங்களுக்கு கே.கே நகரை கலைஞர் கருணாநிதி நகர் என்று சொல்ல வேண்டும் என்று ஞாநி கேட்தற்கு வந்த தார்மீகக் கோபம். மனுஷ்யபுத்திரம் பற்றி ஞாநி எள்ளியதாக நீங்கள் நினைத்தபோது எங்கே போனது. அதை அங்கேயே கேட்டு இருக்கலாமே?
\\
ஞாநியும் அவ்வாறே எளிமையின் சிகரமாக விளங்குபவர். லுங்கிதான் கட்டுவார். அது மட்டுமல்ல. தான் லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டருக்குப் போனதை குமுதத்தில் எழுதி 50 லட்சம் வாசகர்களுக்கும் அந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஞாநி மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் நமது தேசிய உடையே லுங்கிதான் என்று சட்டம் போட்டாலும் போட்டிருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எளிமை மேட்டரால் ஆகர்ஷிக்கப்பட்ட நானும் என்னால் முடிந்த ஒரு எளிமையைப் பின்பற்றி ஒருநாள் ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் சென்றேன். எனக்கும் குமுதத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த உடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் எனக்கு நேர்ந்த விளைவுகள் பற்றி எழுதியிருக்கலாம்; ஞாநியின் லுங்கிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என் ஜட்டிக்குக் கிடைக்கவில்லை. விடுங்கள்.
\\
நீங்களும் தான் தண்ணியடிச்சதை தத்ரூபமாக உங்க பதிவில் வருணிக்கிறிங்க. காசிருந்தால் ஸ்காட்சை ஆறாக வெள்ளமாக ஓடவிடுவேன் என்று எழுதி இருக்கிங்க. (எல்லா குடிமகனும் சொல்லுற வார்த்தை தான்! Including me ). என்ன உங்களுக்கு அதை குமுதத்தில் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை.
War is a quarrel between two thieves too cowardly to fight their own battle - Thomas Carlyle
In this contest, we can say
Quarrel is a war between two cowards too thevishly to fight their own battle.