மெய்யறி யாமை கொளல்.
Friday, October 31, 2008
மார்க்ஸ் சாதனையும் டாஸ்மாக் சாதனையும்
மெய்யறி யாமை கொளல்.
சாட்சாத் திருமால் தான் கேபல்ஸ் (Goebbels) !

அரசியலிலும் போரிலும் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களை கேபல்ஸ் (Goebbels) என்று சொல்லுவார்கள். ரஷ்யாவில் ஜெர்மனி தர்ம அடி வாங்கும்போது கூட "நாஜிகளுக்கு மாபெரும் வெற்றி" என்று முழங்கிக் கொண்டிருந்தவர். ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் முடிவுரும் தருவாயில், கேபல்ஸ் ஹிட்லர் இறக்கும் வரை தீவிரவிசுவாசியாக இருந்து, தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இது ஒருபக்கம் இருக்க, என்னதான் கேபல்ஸ் கூறியவற்றைப் பொய்ப்பிரச்சாரம் என்று சொன்னாலும், அரசியல்ரீதியாகப் பார்ப்பின் இத்தகைய தகவல்கள் தங்களது ஊர் மக்களுக்கு ஒரு மனரீதியான திடத்தன்மையையும், எதிரிகளுக்கு ஒரு சோர்வையும் அளிக்கக் கூடியவை.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட கார்கில் யுத்தத்தின்போது இந்தியாவில் பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சிகள் தடைசெய்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம்,பாகிஸ்தான் கூறப்போகும் இந்திய இழப்பு பற்றிய புள்ளியல் விவரங்கள் இந்தியர்கள் கேட்காமல் இருக்கவே. இலங்கையில் நிகழும் ஈழப்போராட்டத்தில், இலங்கையரசு எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் "புலிகள் மீது கடும் தாக்குதல், பயிற்சித்தளம் தாக்கியழிப்பு, 50 புலிகள் பலி, 100 புலிகள் காயம்" என்றே அறிவித்து வந்துள்ளது. கருத்துக்கணிப்பு போல இதுவும் ஒரு கண்துடைப்பு விடயம் தான். இதனுடைய தாக்கமும், சமுதாயத்தில் பெறும் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. இதைப்பற்றி பேசும்போது, இந்திய இதிகாசங்களில் இருந்து ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடக்கும் போது, தேவர்கள் அமுது அருந்துவதால் இறக்கமாட்டார்கள், ஆனால் அசுரர்கள் தொடர்ந்து அழியாமல் போரிடுவார்கள். இதன் காரணம் திருமாலைக் கேட்டால், அவர் "அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், சஞ்சீவி மந்திரம் அறிந்தவர், அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்துவிடுகிறார்" என்று கூறினாராம். (பார்த்தீர்களா! ஒரு எதிர்இனத்தவரின் உண்மையான வீரத்தைக் கடவுளால் கூட ஒத்துக்கொள்ள முடியவில்லை). ஒருவேளை, தேவாசுர போர், உண்மையாக ஆரிய-திராவிட யுத்தமாக நடந்திருப்பின், திருமால் தான் "கேபல்ஸ்".
மழை என் தோழன் !!

பனி முட்டைகளாய்
முற்றத்தில் வீழ்ந்தபோது
வினைப் பின்னமில்லா
விடலைப் பருவத்திலே
முத்துக்களாய் சேகரித்தேன்!
சன்னலில் சாறலாய்
முத்தங்கள் பதித்தபோது
உடைந்த துளிகள்
உலர் உள்ளத்தை
நனைத்தது உணர்ச்சியால்!
தோட்டத்தில் தூறலாய்
பூவிதழில் பொதிந்தபோது
தழுவாத தருணங்கள்
எண்ணிய தவிப்புகளெத்தனை!
சாப்ளின் சொன்னதுபோல்
உன்னோடு உறவாடும்போது
உப்புநீர் உமிழும்
என்றும் என் கண்ணோடு!