Tuesday, October 21, 2008

இந்துல , சந்துல எழுதுரவங்களுக்கு....

"History must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது.வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள் (மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள்.


இந்தியன் படத்தில் கவுண்டமணி சொல்லுற மாதிரி நெற்றியில் ஈறுகுச்சியில் கோடு போட்டுகிட்டு இந்துவில் எழுதுரேன், சந்துவில் எழுதுரேனு கெளம்பிடுவானுங்க சிலர். இவனுங்களுக்கு தமிழரின் வரலாறும் தெரியாது. இந்தியாவின் பூர்வீகமும் தெரியாது. எப்பயெல்லாம் தமிழீழம் வேணும் என்கிற வாதம் வலுப்படுதோ? அப்பயெல்லாம் ஒருமைப்பாடு, ஐக்கிய இந்தியா, இந்திய இறையாண்மை அதுஇது என்று சொல்லிக்கொண்டு சாமியாட வந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய வரலாறு ஒரு மண்ணும் தெரிந்திருக்காது.

இவனுங்களுக்கு ஒரு கடிதம்,

வந்தேறிகளுக்கு எதற்கு தனிநாடு என்று பேசுபவர்கள், தனிநாடு கேட்பவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துபவர்கள் என்று பேசுபவர்கள் எல்லாரும் இந்த ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். ஹிலாரி க்ளிங்டன், ஒபாமா போன்றோர்கள் கூட விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக கூற, இப்போதே இலங்கைக்கு புளியைக் கரைக்கிறது. அதனாலத்தான் பத்து நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது அவசரமாக சண்டை போடுகிறார்கள். அமெரிக்காவோட ஜால்ரா தானே நீங்க, இன்னும் திருந்தாம இருக்கிங்க.

காஷ்மீர் பிரச்சனை இரண்டு நாடு தொடர்புடையது. அதையும் இலங்கைப் பிரச்சனையும் ஒன்றுனு சொல்லி வழக்கம் போல இந்திய பாசிஸ்ட் மாறி மிரட்டுரிங்க. இலங்கை பிரச்சனையோடு ஒப்பிடலாமென்றால் இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினையை ஒப்பிடலாம். அமைதியாக பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. பிறகு தான் பிரிவினை முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பிரிவினைக்குக் காரணம் மதம். அகிம்சாமூர்த்தி M.K. காந்தி கூட பிரிவினையை ஒத்துகிட்டாரே? அவரை பின்பற்றுவதாக சொல்லிகிட்டு திரிகிற அகிம்சாவதியான நீங்க ஏன் இந்த அளப்பரைய விடுரீங்க. ஒருவேளை இன்று உங்களைப்போல ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல், இந்தியா பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும். இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. கிழக்குப் பாகிஸ்தான் பங்கலாதேஷ் என்ற தனிநாடாக பிரிந்தது. பிரித்துக் கொடுத்தது இந்தியா. இதற்குக் காரணம் வங்காள மொழி பேசிய வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் தொடுத்த அடக்குமுறை.

இப்படி நீங்க மட்டும் அல்ல! பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). கேட்டால் தேசப்பற்று என்பார்கள்? நீங்க என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, அங்கு நடக்கும் உரிமை மீரலையோ காது கொடுத்து கேட்டதுண்டா? அங்கு சென்று இந்தியர்கள் என்றாலே உதைக்கிறார்களே, இந்திய நாடு என்ன, கொடிய கூட மதிக்காம வேற கொடி வச்சிட்டு இருக்காங்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? காஷ்மீர மக்களின் துயர்களையோ அங்கு நடக்கும் கொலைகளையோ கணக்கில் கொண்டதுண்டா? இந்தியமக்கள் இந்திய ராணுவத்திடம், காவல்துறையிடம் அவதியுறுவதையே எழுதத்துணியாத நீங்கள் இலங்கையில் நிகழும் அடக்குமுறை, அவலநிலையை ஏன் கண்டுகொள்ளப் போகிறீர்கள். ஈழதமிழர்கள் செத்துமடியரத நீங்க செய்தி பொடுரது இருக்கட்டும், இந்திய மீனவர்கள் செத்தபோனத நீங்க எப்பயாவது செய்தியில போட்டு இருக்கிங்களா? பிரபாகரனை 20-30 தடவை செத்ததா செய்தி போட்டு இருக்கிங்க. சுனாமி வந்து 10000 பேர் செத்தாலும், பிரபாகரன் என்ன ஆனார் என்ற கவலை தான் உங்களுக்கு. ஏ.சி. அறை உட்கார்ந்து கொண்டு, அமெரிக்க பொருளாதாரம் எப்ப சீர்படும், அணுமின் ஒப்பந்தம் போடப்பட்டால் என்ன நன்மைகள், இந்தியா எப்ப உலகக்கோப்பை வாங்கும் என்று வழக்கம் போல எழுதப்பாருங்க.

5 comments:

  1. அருமையானப் பதிவு தோழரே

    நன்றி இந்தியாவின் ஈனத் தனத்தை வெளிச்சமிட்டுக் காட்டியதற்க்கு

    ReplyDelete
  2. இந்தியமக்கள் இந்திய ராணுவத்திடம், காவல்துறையிடம் அவதியுறுவதையே எழுதத்துணியாத நீங்கள் இலங்கையில் நிகழும் அடக்குமுறை, அவலநிலையை ஏன் கண்டுகொள்ளப் போகிறீர்கள்.
    /
    /
    /
    / நெருப்பு செருப்பால் அடித்தது போல் இருக்கிறது!

    ReplyDelete
  3. satyanarayanan,

    வருகைக்கு நன்றி!

    தமிழ்ராஜா,

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய