Wednesday, December 23, 2009

அமீர்கானைத் தெரியாதென்ற தமிழர்!

அமீர்கான், மாதவன் நடித்து டிசம்பர் 25 வெளிவரவுள்ள படம் 3 இடியட்ஸ். அமீர்கான் தனது 3 இடியட்ஸ் படத்தை புரமோட் செய்வதற்காக வெவ்வேறு விதமான கெட்டப்களில் நாடு முழுக்க ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளார் ஆமிர்கான். அதன் ஒரு கட்டமாக மாறு வேடத்தில் அவர் மகாபலிபுரம் வந்தார்.அங்குள்ள ஒரு கைடின் (Guide) உதவியுடன் தொல்பொருள் பெருமை மிக்க தலங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

சிறிது நேரம் போன பின்னர் தான் யார் என்பதை அந்த கைடிடம் சொல்லி விடலாமே என்ற நல்லெண்ணத்தில், ஐயா, நான்தான் அமிர்கான் என்று கூறியுள்ளார்.அதைக் கேட்ட கைடுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்து விட்டுப் போங்கள், அதனால் என்ன என்ற ரீதியில் அவர் நெகட்டிவாக பதிலளிக்க தடுமாறி விட்டார் அமிர். நான் ஒரு நடிகர் என்று அடுத்த விளக்கத்திற்குப் போனார். அப்படியா, அப்படி எனக்கு யாரையுமே தெரியாதே என்று கைடு தெளிவாக கூற,   அமீர்கானும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

நாம் யாரென்று தெரியவில்லை போலும், உங்களுக்கு ஷாருக்கானை தெரியுமா என்று கேட்டார். தெரியாது ஆனால் பெயர் கேள்விபட்டிருக்கிறேன் என்று  அந்த கைடு கூற,  சரி இந்திப் படம் பார்க்கும் பழக்கம் உண்டா, கடைசியாப் பார்த்த படம் எது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த கைடு, நான் கடைசியாப் பார்த்த படம் 1978-ல் தர்மேந்திரா, ஜீனத் அமென் நடித்து வெளிவந்த ஷாலிமார், எனக்கு தர்மேந்திராவையும், அமிதாப் பச்சனையும் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.அமீர் தனது மோதிரத்தை அந்த கைடுக்கு பரிசளித்துள்ளார். அந்த கைடும் அவருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசளித்துள்ளார்.இப்போது பாலிவுட் முழுக்க இதுதான் பேச்சு, அமீர்கானை தெரியாத ஒருவர் என்று. தமிழகத்தைப் பற்றி இப்போதாவது அமீர் புரிந்து கொண்டாரே!

0 வினைகள் முளைத்துள்ளது:

Post a Comment

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய