Wednesday, December 05, 2007

100 தியேட்டர்களில் ஒன்பது ரூபாய் நோட்டு!

பொதுவாக கிராமங்கள் என்றாலே, தெந்தமிழ்நாடு (பொதுவாக மதுரை, திருநெல்வேலி, கொயம்பத்தூர் ஒட்டிய கிராமங்கள்)தான் திரைப்படங்களில் காட்டப்படும். தங்கர்பச்சனின் படங்களில் தான் வடதமிழகத்தையும் பார்க்க முடிகிறது. பாரதிராஜவுக்குப் பிறகு தமிழக கிராமத்தின் உண்மையான பகுதியை காட்டியது தங்கர்பச்சான் தான். அண்மையில் தங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு படத்தைப் பற்றி ஒரு பக்கம் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளினாலும், திரையரங்கில் ரசிகசிகாமணிகளின் வருகை அவ்வளவாக இல்லை என்று ஒரு செய்தி உலவுகிறது. (நம்ம சியான் விக்ரம் நடித்த சேது படம் கூட இப்படித்தான் முதலில் கஷ்டப்பட்டது). இதுபோன்ற படங்களை தவரவிட்டு பிறகு மணிக்கணக்கில் பண்பாடு பற்றியும் யதார்த்தம் பற்றியும் பேசுவது அபத்தம். இப்படத்தை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்க சமீபமாக தமிழ்சினிமா.காமில் வெளிவந்த தகவல் உங்கள் பார்வைக்கு...!!

**************************** ******************************* ******************************* ***************

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் சாமிநாதன், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான 100 தியேட்டர்களில் படத்தை திரையிட சம்மதித்துள்ளார். இந்த படத்தை பார்க்கிற ரசிகர்கள், தியேட்டருக்கு வெளியே இருக்கிற உண்டியலில் விரும்பிய பணத்தை செலுத்தலாம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி. அது அவரவர் விருப்பம். உண்டியலில் பணம் செலுத்தாமல் இலவசமாக படத்தை பார்த்துவிட்டும் செல்லலாம். இந்த நிபந்தனையின் பேரில் இப்படியரு படத்தை திரையிடுவது தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்!

மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை திரையிட சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடி வந்த இயக்குனர் தங்கர்பச்சான், பிரமிட் சாய்மீராவுக்கு சொந்தமான ஏழு தியேட்டர்களை வாடகை அடிப்படையில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், அவர் கேட்பதற்கு முன்பாகவே முந்திக்கொண்ட அந்நிறுவனம், இவ்வளவு அற்புதமான படத்திற்கு நாங்கள் இலவசமாகவே தியேட்டர் தருகிறோம். அதுவும் 100 தியேட்டர்களை! என்று சொல்ல, பரவசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.

எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 100 திரையரங்கங்களில் இந்த படம் ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும். வெளியே உண்டியலில் விழுகிற பணம் அத்தனையும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளருக்குதான். அதில் ஒரு பைசா கூட தங்களுக்கு வேண்டாம் என்று பெருந்தன்மையோடு தெரிவித்துவிட்டார் அந்நிறுவனத்தின் இயக்குனர் சாமிநாதன். அவரின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு சத்யராஜ், நாசர், அர்ச்சனா, ரோஹினி உள்ளிட்ட அத்தனை பேரும் நேரடியாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

நன்றி: தமிழ்சினிமா.காம்

2 comments:

  1. Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

    ReplyDelete
  2. நூறுக்கு வாழ்த்துக்கள் குட்டி பிசாசு[அருண்]
    சுடாமல் நீயே விமர்சனம் எழுதியிருக்கலாம்.இன்னும் பார்க்கலை .பார்த்தபின் எழுதுவேன்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய