Monday, August 13, 2012

எங்கே யூதர்கள் ?


இஸ்ரேலைச் சேர்ந்த பேராசிரியர் ஷ்லொமோ  சண்ட் 2008-ல் கிப்ரூ மொழியில் ஒரு நூலை எழுதினார். அதன் பெயர் "யூதர்கள் எங்கு எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்கள்". அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு "The invention of Jewish people" என்ற பெயரில் வெளியானது. இந்த வெளியானவுடன் ஷ்லொமோவிற்கு ஒரு பக்கம் சொந்த நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பும், வேறொரு பக்கம் நன்மதிப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. அதிகப் பிரதிகள் விற்று மக்களிடமும் சென்றடந்துள்ளது.  ஷ்லொமோவை பாலஸ்தீனத்தின் பல்கலைக்கழகம் அழைத்து, அவருடைய நூலைப்பற்றி மாணவர்களிடையே பேசவைத்தது. அப்படி என்ன அந்த நூலில் உள்ளது. யூதமதவாதிகளுக்கு எரிச்சலையும், பாலஸ்தீனத்தை ஈர்ப்பையும் கொடுத்துள்ளது. நூலின் சுருக்கத்தை முழுமையாக பார்ப்பதைவிட, அதில் நூலாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ள சில முக்கிய கருத்துகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

…2000 வருடங்களுக்கு முன் ரோமானியர்களால் ஜுடாவைவிட்டு யூதமக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது ஒரு கட்டுககதை. மாறாக யூதர்களை ரோமானியர்கள் வெளியேற்றவில்லை. இரண்டாவது கோவில் மட்டும் இடிக்கப்பட்டது. புரட்சியால் விளைந்த போரில் சிலர் மாண்டுவிட்டனர், சிலர் போர் முடிந்தபின் வழமைக்குத் திரும்பிவிட்ட்னர், இஸ்லாமிய படையெடுப்பின் போது சிலர் மதம்மாறிவிட்டனர். ஆனால் யூதவரலாற்றாசிரியர்கள் கூறுவது போல உலகில் உள்ள அனைத்து யூதர்களும் இஸ்ரேலில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது மாபெரும் பொய். இஸ்ரேலை யூதர்களின் பூர்வீக பூமியாக உலகிற்கு காட்டவும், யூதர்களை நம்பவைக்கவும் இந்தக் கட்டுகதை புனையப்பட்டுள்ளது.

…ஒருவன் யூதனாக பிறக்கவே முடியும், மாற முடியாது என்பதும் முழுபொய். 100 வருடங்களுக்கு முன் உலகின் பல்வேறு பகுதியில் இருந்த யூதர்கள், மதம் மாற்றப்பட்ட அப்பகுதி மக்களே ஆவார்கள்.

…யூதயினம் என்ற ஒன்று இல்லவேயில்லை.  யூதர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் தேசியயினம் இல்லை. யூதர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அவ்வளவே. உதாரணமாக இத்தாலியர்கள் , ஆங்கிலேயர்கள் , ஜெர்மனியர்கள் . இவர்களிடம் இன அடையாளமாக பல விடயங்கள் உண்டு. உணவு, விழா, இசை, நடனம் எனப் பல உண்டு. ஆனால் இது போன்ற இன அடையாளம் யூதர்களிடம் இல்லை. உலகில் உள்ள யூதர்களிடம் மதவிடயங்கள் தவிர்த்து வேறு ஒற்றுமை எதுவும் இல்லை.

…இஸ்ரேல் தன்னை ஒரு ஜனநாயக நாடாக கூறிக்கொண்டாலும், இஸ்ரேலை யூதர்களுக்கான நாடாகவே அறிவிக்கின்றது. அங்கு வாழும் மற்ற மதத்தினரை அன்னியப்படுத்துகிறது. யூத இஸ்ரேலியர்கள் மற்ற மதத்தினரை மணப்பதைத் தடுக்கிறது. தான் குடியுரிமை பெற்று வாழும் ஒரு நாடு தனக்கானது என்ற எண்ணத்தைக் கூட மற்ற மதத்தினருக்கு வழங்க மறுக்கிறது.


யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். இஸ்ரேலிய இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்பதே நூல் ஆசிரியரின் தீர்வு.

…பாலஸ்தீனம் சென்று பேசியபோது (யூத மதம் சார்ந்த) இஸ்ரேலிய  ஷ்லொமோவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது "பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்கள் இஸ்ரேலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா?" என்பது. அதற்கு ஷ்லொமோ சொன்னது என்னவென்றால் "யூதர்கள் பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலை உருவாக்கி இருப்பது தவறு, அதற்காக இரண்டு தலைமுறை கண்ட அவர்களை வெளியெறச்சொல்வது முறையல்ல. கற்பழிப்பின் மூலமாக பிறந்த குழந்தைக்கும் சமுதாயத்தில் வாழ உரிமை உண்டு தானே!". ஷ்லொமோ சொன்ன வார்த்தைகளின் உண்மை பாலஸ்தீனியருக்கு புரிந்திருக்க வேண்டும். அன்றைய மறுநாள் பாலஸ்தீனிய நாளேட்டின் தலைப்புச் செய்தி "கற்பழிப்பின் மூலமாக பிறந்த குழந்தைக்கும் சமுதாயத்தில் வாழ உரிமை உண்டு தானே".

2 comments:

  1. அன்பையும் அறத்தையும்
    மனிதனிடத்தில் தான்
    எதிர்பார்க்க முடியும்,
    கடவுளிடம் அல்ல.

    மின் அஞ்சல் வழியாக சேர்ந்துள்ளேன். நிறைய விசயங்களைப் பற்றி மிகத் தெளிவாகவே எழுதியிருக்கீங்க. அதென்ன பேரு மட்டும் குட்டிப்பிசாசு. ஏதாவது குறிப்பிட்ட காரணம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி,

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      //அதென்ன பேரு மட்டும் குட்டிப்பிசாசு//

      சின்ன வயதில் அது என்னுடைய வீட்டில் எனக்கு செல்லப்பெயர்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய