Saturday, May 19, 2007

இந்தியப்பெண்ணிற்கு விழிப்புண்ர்வு அவசியம்


பெண்கள் முன்னேற்றம் என்றால் என்ன? இந்திய சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது? இது போன்ற கேள்விகள் நம்மிடையே தோன்றுவதுண்டு. இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்தில் மூன்று பரிமாணம் உள்ளது. அவை படிப்பு, குடும்பம் மற்றும் சமூகம். இத்தகைய முன்னேற்றத்திற்கு தடைக்கல் படிப்பு, குடும்பம், சமூகம் சார்ந்த கொடுமைகள். இன்றைய சூழலில் பல பெண்கள் படித்திருந்தும் வேலையிலிருந்தும் சமூக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். சமூகத்தில் படிப்பறிவை தவிர்த்து குடும்பமும் குடும்பம் சார்ந்த சமூக அறிவும் அவசியம் பெண்களுக்குத் தேவை. பெரும்பாலும் இந்தியவிலுள்ள தாய்மார்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பொறுப்புடன் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் குடும்ப தந்தையின் பொறுப்பின்மையாகவும் இருக்கலாம். (என்னுடைய பார்வையில், இதனால் தான் இந்தியாவில் அதிகப்படியானோர் தந்தையைவிட தாயைத்தான் அதிகமாக நேசிக்கிறார்கள்). ஆகவே இன்னிலை மாற குடும்ப பராமரிப்பிற்கு ஆண்களின் பங்கு அவசியம். குடும்ப பிரச்சனைகளில் வரதட்சனைகொடுமை தலையாயது. 1997-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி ஆண்டிற்கு 5000 பெண்கள் வரதட்சனை கொல்லப்படுகிறார்கள். 1985-லேயே சட்டங்கள் இயற்றப்பட்டும் பயனில்லாமல் இருப்பது போல தோன்றுகிறது. ஒரு பெண் படித்து, வேலையில் இருந்தால் குடும்ப சூழ்னிலை சீராக அமைய வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் சமூகவலையில் இந்திய பெண்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. 2000ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1மணிநேரத்திற்கு ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுகூட குறைவான புள்ளிவிவரமா? என்பது என் சந்தேகம். இதுபோன்ற குற்றங்கள் பற்றி யாரும் சரியாக புகார் செய்வதில்லையா? இதுபோன்ற கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படுகிறதா? என்பதே கேள்விகள். மேலை நாடுகளில் கணவன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் கூட மனைவியர் புகார் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே சட்டம் இருந்தும் கூட சமூகத்திற்கு பயப்படும் நிலையில் தான் நம் பெண்டிர் உள்ளனர். இத்தகைய சூழ்னிலையில் 1. சட்டம் இளகுவான சீரான ஒத்துழைப்பை தரவேண்டும், 2. பெண்கள் இத்தகைய சீர்கேடு நடவாமல் தடுக்க முன்வந்து தங்கள் புகார்களை பதிவு செய்யவேண்டும், 3. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க படவேண்டும். இக்காலத்தில் வன்புணர்ச்சிகள் அதிகமாவதர்க்கு முக்கிய காரணியாக ஆபாச படங்களையே குறிப்பிடுகிறார்கள். அதைவிட முக்கியம் முறையான பாலியல்கல்வி. பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் கூட முறையான பாலியல் கல்வி மூலம் தவிர்க்கலாம். இரண்டாவதாக குறிப்பிடப்படவேண்டியவை வேலையிடத்தில் நிகழும் பாலியல் தொல்லைகள். சில வருடத்திற்குமுன் தொலைக்காட்சி நிலையங்களில் நேரும் பாலியல் தொல்லைகள் பற்றியும், அங்கே அதிகாரிகளாக பணிபுரியும் கிழடுகள் ஜொள்ளுவதையும் கிழித்திருந்தார்கள். இதிலே கொடுமை என்னவென்றால், வேலை போகக்கூடதென்று பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நடக்கும் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை தடுக்க மேலே கூறிய அனைத்து முயற்சிகள் பொருந்தும்.

முடிவாக, சமுதாயத்தில் மேன்மை பெற முதலில் மகளிருக்கு தன்மானம் விழிப்புண்ர்வு தேவை. தனக்கு நேரும் கொடுமைகளைக்கண்டும் பொறுத்துக்கொண்டும் சும்மா இருக்கக்கூடாது. சட்டத்தின்முன் கொடுமைக்காரர்களின் முகமூடியை கிழிக்கவேண்டும். அப்படிச்செய்யாவிடில், விட்டில் பூச்சி போல தினம்தினம் நெருப்பை நோக்கிய மரணம் தான்.

4 comments:

  1. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    கனேசன்

    ReplyDelete
  2. //சமுதாயத்தில் மேன்மை பெற முதலில் மகளிருக்கு தன்மானம் விழிப்புண்ர்வு தேவை.// தேவைதான் ஆனால் யார் தருவது? நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  3. ஜெசிலா,

    //தேவைதான் ஆனால் யார் தருவது? //

    விழிப்புணர்வு யாரும் தர முடியாது! ஆனால் அறிமுகப்பத்தலாம்!இந்தியாவில் படித்த பெண்களுக்கே விழிப்புனர்வு குறைவு எனும்பட்சத்தில் படிக்கதவர்கள் நிலைமை சொல்லித்தெரிய தேவை இல்லை!இந்தியாவில் உளவியல்ரீதியாக ஆண்-பெண்(குடும்பத்திற்குள்) நெருக்கம் குறைவு.எனவே பெண்களே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்க வேண்டிய நிலை! தங்கள் போன்ற பெண்கள் முயற்சிக்கலாம், உங்கள் அறிவுரையால் 2 (அ) 3 பெண்கள் திருந்தினால் கூட போதும்!!நாடு நலம் பெறும்! என்னுடைய மகளிர் உடன்பிறப்புகள் நல்ல நிலையை அடையும்!

    ReplyDelete
  4. ஜெசிலா,

    //தேவைதான் ஆனால் யார் தருவது? //

    விழிப்புணர்வு யாரும் தர முடியாது! ஆனால் அறிமுகப்பத்தலாம்!இந்தியாவில் படித்த பெண்களுக்கே விழிப்புனர்வு குறைவு எனும்பட்சத்தில் படிக்கதவர்கள் நிலைமை சொல்லித்தெரிய தேவை இல்லை!இந்தியாவில் உளவியல்ரீதியாக ஆண்-பெண்(குடும்பத்திற்குள்) நெருக்கம் குறைவு.எனவே பெண்களே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்க வேண்டிய நிலை! தங்கள் போன்ற பெண்கள் முயற்சிக்கலாம், உங்கள் அறிவுரையால் 2 (அ) 3 பெண்கள் திருந்தினால் கூட போதும்!!நாடு நலம் பெறும்! என்னுடைய மகளிர் உடன்பிறப்புகள் நல்ல நிலையை அடையும்!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய