Friday, October 31, 2008

மார்க்ஸ் சாதனையும் டாஸ்மாக் சாதனையும்




#1 மார்க்ஸ் சாதனை:
தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதர சிக்கலுக்குப் பிறகு மறுபடியும் மார்க்சிசம், சோசியலிஸம், கம்புனிஸம் பற்றிய பொதுவான பார்வை மாறியுள்ளது போலும். தேடல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஜெர்மனியில், கார்ல்-டைட்ஸ் வெர்லாஃக் பதிப்பகம் 1500-க்கும் மேற்பட்ட கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூலின் பிரதிகளை விற்றுள்ளது. "1867-ல் எழுதப்பட்ட மூலதனம், ஆண்டிற்கு பொதுவாக விற்பனை இரண்டு இலக்கம் தாண்டுவதே அரிதாக இருக்கும்போது, தற்போது விற்பனை அதிகரித்துள்ளது", என்று அதன் பதிப்பாளர் கூறுகிறார்.

#2 டாஸ்மாக் சாதனை:
தமிழகம் முழுவதும் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளில் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'"ல் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும் எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. எதோ திரையில் விஜயகாந்த் வசனம் பேசுவது போல, ஒரே புள்ளியல் விவரமாக தினமலரில் வந்துள்ளது. அரசுக்கு வருமானம் அதிகமானாலும், இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கீழ்தட்டு மக்கள்தான். மற்ற மாநிலங்களை விட தற்போது, தமிழகத்தில் குடிப்போர் எண்ணிக்கை பெறுமளவில் அதிகரித்துவிட்டது. குடிப்பழக்கம் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் கூட பரவாயில்லை, அப்படி இருப்பதில்லையே. இது பெருமளவில் தனிமனிதர்களின் பொருளாதாரச் சிக்கலை அதிகரிக்கும், அதன் தொடர்ச்சியாக சமுதாய சிக்கல்கள் உருவாகலாம். தெரியாமலா வள்ளுவர் கள்ளுண்மை அதிகாரத்தை, தனிமனித ஒழுக்கமாக கருதி அறத்துப்பாலில் வைக்காமல், பொருட்பாலில் வைத்தார்.
என்ன நடக்கிறது, எங்கே போகிறது தமிழகம். மக்களைப் போதையில் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த கலைஞர் என்ன கலிகுலாவா? குறளோவியம் படைத்த கலைஞருக்கு இது தெரியாதா என்ன?
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

2 comments:

  1. சர்க்கரை மொலாசஸில் இருந்து பெறப்படும் சாராயம் தான் மிகவும் கெடுதலானது, சீப் என்பதால் தமிழ க அரசு அதை விற்கிறது. இவங்க மக்கள் நலம் பற்றிய அக்கறை அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாடு நாசமாக போகனும்னு இருந்தா யார் அதை மாத்த முடியும்

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய