Friday, August 29, 2008

அண்ணன் பாலபாரதிக்காக மறக்கமுடியாத ஒரு பாடல்

பாலபாரதி-மலர்வனம் லட்சுமி அவர்களின் இல்லறம் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள். 'அந்தநாள்' படத்தை இயக்கிய வீணை பாலசந்தர் அவர்கள் நடித்து சந்திரபாபு பாடிய 'பெண்' என்ற படத்தில் இடம்பெறும் பாடல் உங்களுக்காக!



நரிக்கதையும் நம்ம பிரபலங்களும்

நரி மற்றும் திராட்சைக் கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். இதையே நம்ம பிரபலங்கள் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும். சும்மா!! உங்க கற்பனைக் குதிரைய தட்டிவிடுங்க!!


உலகநாயகன் கமல்ஹாசன்:
இன்று உங்களுக்கு சரித்திரத்தின் மடியில் சாகா வரம் பெற்ற ஒரு கதையைக் கூறப்போகிறேன். இது ஒரு நரிக்கதையும் கூட. 10-ம் நூற்றாண்டு. உலகத்தில் இஸ்லாத்துடன் திராட்சையும் அதிகம் விளைந்த காலம். கானகத்தின் வழியே சென்ற ஒரு நரிக்கு அங்கு கனிதிருக்கும் திராட்சைகள் ரொம்பவும் பிடித்துப் போனது. பல கோப்பை ரசம் பருகிய மதம் அதன் மனதினுள் ஏற்பட்டது. பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சியடையாத நரியின் செய்கைகளும், முயற்சிகளும் திராட்சையைப் பெற்றுத் தருவதாயில்லை. எட்டியும் திராட்சை கிடைக்காமல் போனது இயற்கையின் சூழ்ச்சியும் அல்ல, கடவுளைத் துதித்தும் கிடைக்காமல் போனது நரியின் வீழ்ச்சியும் அல்ல. இது வெறும் மனித பரிமாணத்தை எட்டாத நரியின் கையறு நிலை. வாழ்க பாரதம்!! (திருவிளையாடல் தருமி: பேசும்போது அழுத்தம் திருத்தமா பேசு! படம் எடுக்கும் போது கோட்டை விட்டுடு!!!)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்:
இப்ப ஒரு குட்டிகதை சொல்ல போரேன். ஒரு ஊர்லெ ஒரு நரி இருந்துச்சாம். அது ரொம்ப பசியில காட்டுவழியா போறப்ப, திராட்சை பலங்கலெ பார்த்துச்சு. அதெ எப்படியாவது சாப்பிடனும்னு ரொம்ப ட்ரை பண்ணுச்சு. முடியல. எவ்வளவு ட்ரை பண்ணியும் முடியல. கடசியா முயற்சி பண்ணிச்சி அப்பவும் கிடக்கல. பிறகு திராட்சைன்னாலே வெறுத்துப் போச்சி. சுத்தமா பிடிக்கல. இத நான் ஏன் சொல்லுரென்னா, "அதிகமா ஆசைபடுர நரியும், அதிகமான உயரத்தில இருக்கிற திராட்சையும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது". 'கிடைக்கிரது கிடைக்கம இருக்காது; கிடைக்காதது எப்பவும் கிடைக்காது'.

கலைஞர் மு.கருணாநிதி:
உடன்பிறப்புக்குக் கடிதம். உடன்பிறப்பே கேளாய்! உலகத்தின் துயர் துடைக்க 'உளியின் ஓசை' படைத்த எனது கரங்கள், இன்று 'நரியின் ஆசை' என்றொரு மகத்தான காவியம் எழுதிவிட்டது. இக்கதையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் விபீடண நரியொன்று கானகத்தில் திராட்சைகளைக் கண்டு களிப்புற்றது. களிப்பின் விளிம்பில் நின்ற கபட நரியின் கோரப்பற்களுக்கு கிட்டாத திராட்சை ஒரு சீதை. தமிழினிமை கொண்ட திராட்சையை எட்டி எடுக்க முயன்ற தோற்றுப்போன நரி ஒரு குடிகார இராமன்.

வெண்ணிறாடை மூர்த்தி:
ப்ப்ப்ர்ர்ர்ர்! ப்பாப்பா! கதைய கேளு! காட்டுப் பக்கமா ஒரு கட்டுமஸ்தான நரி கமுக்கமா வந்துதான். அங்க கொலகொலயா தொங்குன திராட்சைய பார்த்து, நரியோட கால்கட்டைவிரல்ல இருந்து கபாலம் வரை கபால்னு வேர்த்துப்போச்சி. குபீர்னு கெளம்புன குஷியில குதூகலமான் நரி திராட்சைய லபக்குனு லாவனும்னு மனிஷா கணக்கா மடார்மடார்னு குதிச்சிதான். பல தடவை குதிச்சும் பழம் கிடைக்காத நரி, குப்புற விழுந்ததுல, பலான இடத்துல அடிபட்டு ப்பரபேன்னு கெளம்பிச்சாம்.

கேப்டன் விஜயகாந்த்:
ஏய்! நான் இப்ப சொல்லப்போற கதை, நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு தமிலனும் தெரிஞ்சிக்க வேண்டியது. ஒரு பாக்கிஸ்தான் நரி, காஸ்மீர்ல இருக்கிர திராட்சைக்கு ஆசைப்பட்டு திருட்டுதனமா வந்தது. எவ்வளவு எட்டியும் திராட்சை கிடைக்கம போக, இன்னைக்கு தீவிரவாதியா மாறிடிச்சி. (ஒரு வேளை உங்கள போல சுவத்துலயோ,மரத்துலயோ காலை வச்சி எட்டி இருந்தா நரிக்கு திராட்சை கிடைச்சி இருக்கும்னு நினைக்கிறேன்!!!) இப்படி இந்த வருசத்துல பார்டர கிராஸ் பண்ண நரிங்க 305, திருடப்பட்ட திராட்சைங்க 2077. இதுல தீவிரவாதியா மாறிப்போன நரிங்க 201. இத உடனடியா நிறுத்தனும்னா எமர்ஜன்சி கொண்டுவரனும். இந்த நிலமய மாத்த ஒவ்வொரு தமிலனும் முன்னுக்கு வரனும்.

மேஜர் சுந்தரராஜன்:
ஹா..ஹா...For past 25 years, கடந்த 25 வருஷமா இந்தக் கதைய யார்கிட்டயாவது சொல்லனும்னு துடிச்சிட்டு இருக்கேன். A Fox, ஒரு நரி காட்டுவழியா போறச்சே, grapes அதாவது திராட்சைய பார்த்துச்சாம். எவ்வளவு try பண்ணியும், sorry! அந்த திராட்சை நரியோட கைக்கு கிடைக்கல. இதுக்குக் காரணம், அந்த நரி ரொம்ப short...அதாவது ரொம்ப குட்டை.

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா கோட்டைகள் போல, ஜஞ்ஜிராவும் தன்னுடைய கட்டிடச் சிறப்பினால் கைப்பற்ற முடியாத ஒரு கோட்டையாக திகழ்ந்தது. சிவாஜி ஆறு முறை முயற்சி செய்தும் இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இக்கோட்டைப் பற்றி மேலும் தகவல் அறிய இந்த இணைப்புக் செல்லவும்.

http://en.wikipedia.org/wiki/Janjira

http://www.murudjanjira.com/

சரியாக பதில் கூறிய ஞானசேகர், முயற்சி செய்த உருப்படாதது அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Thursday, August 28, 2008

இது என்ன இடம் என்று சரியாக சொல்லுங்க பார்ப்போம்!

படத்தில் காணப்படும் இது என்ன இடம் என்று சரியாக சொல்லுங்க பார்ப்போம்!
மேலும் தகவல்: இது கடலின் நடுவில் இருக்கும் ஒரு கோட்டை. இது இந்தியாவில் தான் இருக்கிறது.

கலைஞரின் தெளிவான பதில்கள்!

இடம்: டீக்கடை

சிண்டு: அண்ணே! இன்னைக்கு என்ன சேதியா வந்து இருக்கு!

அண்டு: உற்சாகமா Sultan the warrior வருதாம்.

சிண்டு: என்ன இது! சுல்தான் கழுத்துல கொட்டை கட்டிகிட்டு இருக்காரு, விட்டா பட்டையும் நாமத்தயும் போட்டு பண்டாரமாக்கிடுவிங்க போல.

(கலைஞர் டீக்கடைக்கு வரார்!)

அண்டு: உளியின் ஓசை தொபக்கடீர்னு ஊத்திகிச்சாமே?

கலைஞர்:

சுள்ளான் முதல் சுட்டபழம் உள்ளிட்ட

எல்லா மொக்கைக்கும் சூடான பதிவிடும்

கழகத்தின் பதிவுலக போர்வாள் 'லக்கி'

'உளியின் ஓசை' பற்றி பதிவிடாத

காரணத்தால்தான் ஊத்திக்கொண்டது.

சிண்டு: கலைஞர் ஐயா! இலங்கை தமிழர் உரிமை காக்க உங்க கைவசம் எதாச்சும் திட்டம் இருக்கா?

கலைஞர்:

வசனங்கள் மொக்கையாகப் போனாலும்,

அடுத்த வாய்ப்பு தக்கையாகிப் போகாது!

ஈழத்திற்காக என் இன்னலையும் மீறி,

உளியின் ஓசை போன்றதொரு

உன்னதகாவியம் படைக்க உள்ளேன்!

அண்டு: ஈழத்தமிழருக்கு பிரச்சனை தீர்க்கப்போறேனு, உலகத்தமிழர்களையே கொடுமை படுத்த கெளம்பிடுவிங்க போல!

சிண்டு: தமிழ்...தமிழ்...என்று எப்பவும் பேசுற உங்களோட பொண்ணு கவுஜப்புயல் கனிமொழி, காபி வித் அனு என்று ஒரு தமிழ் சானலில் வரும் நிகழ்ச்சியில், இங்கிலிபீசுல மட்டுமே பேசி வெளுத்தாங்களே, அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

கலைஞர்:

ஆங்கிலம் அறியாமல்

மத்திய அமைச்சர் ஆவது எங்ஙனம்

மச்சானுக்கு ஒரு வாய்ப்பு

மருமகனுக்கு ஒரு வாய்ப்பு

மகளுக்கு ஒரு வாய்ப்பு

சிண்டு: நீங்க சமீபத்தில் பழ.நெடுமாறனைப் பற்றி காரசாரமாக கவிதை எழுதி திட்டுரிங்களே! என்ன விடயம்?

கலைஞர்:

உடன்பிறப்பே! கேளாய்!

ஞாநி என்ற கோணி 'ஓ' போட்டு

எழுதிய ஒட்டடைகளை மறுமொழிந்த மடையன் அவன்!

மனைவிகள் ஆயிரமாயிரம் கட்டிய தசரதனை,

மூன்றுமனைவிகள் கட்டிய அடியேனுக்கு ஒப்பிட்டமூடன் அவன்!

தமிழர்குடி கெடுத்த குடிகார இராமனை,

என் குலக்கொழுந்துடன் ஒப்பிட்ட கூற்றுவன் அவன்!

நான் எழுதிய கவிதை ஓர் உறைகல்!

உண்மையைத்தான் கூறும்.

அண்டு: இதுக்கும் கவிதையா! நீங்க சொன்னது உறைகல்லோ கடப்பாகல்லோ தெரியாது. ஆனால் அவர் கூறியது உண்மை தானே! நீங்களும் அக்பர் போல ஆட்சியவிட்டு போக மாட்டீங்க போல... உங்க பசங்களும் ஜஹாங்கீர் போல அப்பன் எப்ப...திண்ணை எப்ப காலியாகும்னு காத்துகிட்டு இருக்காங்க.

கலைஞர்: *****************(Censored)

அண்டு: சிண்டு!!! டோட்டல் பேமிலி டேமேஜ்! இன்னும் பச்சையாக திட்டுரதுக்கு முன்னாடி எஸ்கேப்!!!

Sunday, August 24, 2008

ரஜினி மற்றும் விஜயகாந்தின் அயராத முயற்சிக்கான வெற்றி!!

கமலுடைய முயற்சி வெற்றி பெற்றதோ? இல்லையோ? நமக்கு இப்போது அது பற்றி விடயம் தேவையில்லை. ஆனால் ரஜினி, விஜயகாந்த் அவர்களின் அயராத முயற்சி இன்று வெற்றி பெற்றுவிட்டது. ஹாலிவுட் படங்களில் ஒரு Hellboy தான். தமிழ்படங்களில் ரஜினி, விஜயகாந்த், விஜய்,...என பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. தமிழ் படங்கள் ஹாலிவுட் தரத்திற்கு போகத் தேவையில்லை. ஹாலிவுட் படங்களே தமிழ் தரத்திற்கு பின்னேறி வந்துவிடும். காரணம்! தமிழ் படங்களில் இருக்கும் புதுமை (அ) பின்நவீனத்துவம்(!?). கீழேயுள்ள படத்துண்டு, இதற்கு ஒரு சான்று!


Thursday, August 21, 2008

Hits...Visits...பார்க்க இது பெஸ்ட்!

Icerocket Blog tracker ஹிட்ஸ் தவிர்த்து இன்னும் உங்கள் பதிவு சார்ந்த பல தகவல் தருவதாக உள்ளது. ஒருமுறை பதிப்பித்துக் கொண்டால் போதும், எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். பதிப்பிக்கும் முறை வெகு சுலபம். நீங்கள் பதிப்பிக்க வேண்டிய தளமுகவரி.

Tuesday, August 19, 2008

டீக்கடை: விஜயகாந்த், வினுசக்ரவர்த்தி,வெண்ணிறாடைமூர்த்தி

(இடம்: டீக்கடை இம்சைகள்: வெண்ணிறாடை மூர்த்தி, வினுசக்ரவ்ர்த்தி, விஜயகாந்த்)

வெண்ணிறாடை மூர்த்தி: ப்ர்ர்ர்! குஜால இருந்த ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் ஐஸ் கோயில் பிரச்சனை. அதோட தீர்வுக்காக நம்ம கலைஞர் கபாலத்தில் இருந்து கலக்கலா ஒரு ஐடியாவ தட்டி விட்டாராமே?

வினுசக்ரவர்த்தி: என்னத்த எழவு சொல்லி இருப்பாரு! "சிவன் ஒரு கஞ்சாகுடி; ஆனால் அவர் எனக்கு எதிரியுமல்ல"னு சொல்லி மத்தவன் தலையையும் அவரோட தலை மாதிரி ஆக பிச்சிக்க வைப்பாரு!!

வெ.மூ: ஒலிம்பிக் போட்டியில அஞ்சு பாப்பா, அபாரமா ஆடும்னு பார்த்தா. இப்படி மண் தாண்டுரேனு தொபகட்டீர்னு உழுந்து மண்ணை கவ்விடுச்சே!

வி.ச: அடி செருப்பால! அது என்னய்யா அஞ்சு மேல மட்டும் அப்படி ஒரு அக்கரை. ஒருத்தனைத் தவிர போன இந்தியன் எல்லாரும்தான் மெடலும் வாங்கம கொடலு தள்ள வரப்போறானுவ!பிறகு என்னதுக்கு அந்த கருமம்!

வெ.மூ: சரி அது இருக்கட்டும்! உலகநாயகன் உருவாக்குர மர்மயோகி படத்தில நடிக்க நக்கல் நாயகன் சத்யராஜை கூப்பிட்டாங்களாமே! நெசமாவா?

வி.ச: என்னது உலகநாயகனா? அறுவாளை எடுத்தேன் கொலை விழுகும். முதல்ல தமிழ்நாட்டுக்கு படம் எடுக்கட்டும் அப்புறம் உலகம் அண்டம் பத்தி பேசலாம். வாழும்பெரியாரை கூப்பிட்டு நெப்போலியன் வந்தது போல இரண்டு சீன் நடிக்க சொன்னா எப்படி நடிப்பாரு!நமீதா கூட குத்தாட்டம் போடும்படி ஒரு சீன் வச்சா சரினு சொல்லுவாரு!!

உனக்கும் எதாவது தமிழ் வாத்தியாரு ரோல் இருக்கானு கேட்டியா? அப்படியே எனக்கும் 'எழவு' 'நாசமா போவ' அப்படினு சொல்லுற மாதிரி ஒரு ரோல் கிடைக்குமானு பாரு!

வெ.மூ: இப்படி குபீர்னு கோபம்பட்டா, கொடக்கு இருக்குற என்னோட வேட்டி லொடக்குனு கழண்டுக்கும். கத்தாதிங்க! அமைதியா அடுத்த சேதிய கேளுங்க!

வி.ச: யோவ்! சரிய்யா! அடுத்த எழவை படி!

வெ.மூ: தமிழ்மணத்தில் யாரைப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை தாருமாரா வையராங்களாமே?

வி.ச: பானையில தண்ணி வச்சி குடிக்க சொல்லு, வயித்தெரிச்சல் கொறயும்!

(விஜயகாந்த் டீக்கடைக்கு வேகமா வந்துட்டு இருக்கார்)

வெ.மூ: என்ன புரச்சி கலஞரே! டீசர்ட்டுல வரீங்க!

வி.கா: நான் வெள்ளையும்ஜொள்ளையுமா வந்தேனா... சட்டசபை போறேனு அர்த்தம். காக்கிசட்டையில வந்தேனா... படத்துல நடிக்க போறேனு அர்த்தம். டீசர்ட்டுல வந்தேனா... டீ சாப்பிட போறேனு அர்த்தம்.

வி.ச: என்ன எழவுயா இது! ஒரு கேள்வி கேட்டதுக்கு மூணு பதில் வருது! இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா?

வெ.மூ: படத்துல படப்படனு Dialogue பகிரங்கமா பப்பரபேனு பேசி இப்படி ஆகிட்டாரு! இவருக்கு Accroto Dialogomania-னு ஒரு வியாதி. அது இருந்தா இப்படித்தான். கண்டமேனிக்கு உளருவாங்க!

வி.கா: தமிழனுக்கு ஒரு டீ போடுப்பா! ஆங்ங்ங்!!

(வெ.மூ-வைப் பார்த்து) நியுஸ்பேப்பர்ல பாக்கிஸ்தான் திவிரவாதிகளைப் பத்தி எதாவது போட்டு இருக்கா?

வி.ச: என்னைய்யா? வந்ததும்வராதுமா தீவிரவாதிய பத்தி கேக்குராரு!

வெ.மூ: இவருக்கு இன்னோரு வியாதியும் இருக்கு! Terroristophilia-னு சொல்லுவாங்க!

வி.ச: அது சரி!

வெ.மூ: தீவிரவாதிகளைப் பத்தி திவ்யமா ஒன்னும் இல்லையே!

வி.கா: என்னது ஒன்னும் இல்லையா? இந்தியாவில மொத்தம் 2500 தீவிரவாதிங்க இருக்காங்க. மணிரத்னம் படத்தில் வர தீவிரவாதிங்க 1008. அர்ஜுன் படத்துல வரவங்க 90. என்னோட படத்தில் வரவங்க 1402. திருந்துர தீவிரவாதிங்க 2000. திருந்தாம சாவரங்க 500. Climax-ல itemsong பார்க்கிற தீவிரவாதிங்க 2300. பார்க்கதவங்க 200. நான் ஆச்சிக்கு வந்தேனா, தீவிரவாதிகள முமைத்கான் டான்ஸ் பார்க்கும் கொண்டிருக்கும்போது கண்டிப்பா பிடிச்சிக்காட்டுவேன்.

இப்படித்தான் 1942-ல காமராஜர் கால்ல முள்ளு குத்தினது. அதுக்கு காரணம் இந்தக் கருணாநிதி. 1980-ல் மவுண்ட் ரோட்டில் ஒரு நாய் கொலைச்சது. அதுக்கு காரணம், ஜெயலலிதா. ஆனா நான் ஆச்சிக்கு வந்தேனா எம்ஜிஆர் ஆச்சிய கொடுப்பேன்.

வெ.மூ: (வினுசக்ரவர்த்தியைப் பார்த்து) இதுக்குமேல இங்க நாம இருந்த கபாலம் வெடிச்சி கட்டெரும்பு வெளியவந்துடும். வா! கபால்னு கழண்டுக்குவோம்.

(இரண்டு பேரும் துண்டைக்காணோம், துணியைகாணோம்னு எஸ்கேப்ப்ப்ப்ப்...!! ஆனா இன்னும் நம்ம கேப்டன் நிறுத்தினபாடில்ல)

Monday, August 18, 2008

கொஞ்சம் படம் காட்டுவோம்!!






New Page 1

கீழேயுள்ள படம் 1871-ல் தாமஸ் நாஸ்ட்டால் தீட்டப்பட்ட டார்வின் பற்றிய கேலிப்படம். தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் அரசியல் கேலிசித்திர உலகின் தந்தை எனப் போற்றப் படுபவர் என்பது கூடுதல் தகவல்.

Sunday, August 17, 2008

ரீமேக் எதுக்கு? (அ) ரஜினி vs சிரஞ்சீவி

Page 1HTML clipboard

அண்டு: 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதை இனிமேல் தமிழகத்தின் தாரகமந்திரமாக இருக்கவேண்டும்.

சிண்டு: ஏனெண்ணே! அப்படி சொல்லுரிங்க!!

அண்டு: குசேலன், சத்யம் என சரமாரியாக அறுவைகள் வந்து தமிழர்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து சுனாமியாக வரப்போவது சுந்தர்.சி C/O குஷ்பு நடிப்பில் உலகம் சுற்றும் வாலிபன். தமிழகத்தில் இருக்கும் இதர பஞ்சங்களோடு இப்போது கதைப்பஞ்சமும் வந்துவிட்டது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் இந்த கூத்துகள். இப்படியாக போனால் நல்ல படங்கள் என்று ஒன்று விடாமல் நாறடித்துவிடுவார்கள் போலப்பா!

சிண்டு: இதுக்காக தமிழில் ரீமேக் படமே எடுக்கக்கூடாதா?

அண்டு: நான் அப்படி எதுவும் சொல்ல வரல!! ரீமேக் என்று எடுத்துக்கொண்டால், நல்ல படங்களை தற்போதைய காலத்திற்கேற்றவாறு சிறந்த இயக்குனர்கள் உருவாக்கினால் அற்புதமாக வர வாய்ப்புகள்(!) உண்டு. என்னைப் பொருத்தவரை வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தநாள்' படத்தை மணிரத்னம் இயக்கலாம் (எனோ! மணிரத்னம் தவிர எனக்கு யாரும் தோன்றவில்லை).

சிண்டு: ரீமேக் செய்யவே முடியாத தமிழ்படங்கள் உண்டா?

அண்டு: எனக்குத் தெரிந்து யாராலும் எடுக்க முடியாத தமிழ்படங்களென்றால், ஒன்று வஞ்சிக்கோட்டை வாலிபன் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன். இன்றைய நாளில் இவைபோன்ற படங்களை தமிழில் எடுப்பது மிகவும் கடினம். அப்படி எடுத்தால் தசாவதாரத்தில் முதல் பத்து நிமிடம் என பில்டப் காட்சிகளாகத்தான் இருக்குமே தவிர வேறொரு கருமமும் இருக்காது.

மேலும் ஒரு செய்தி ஆயிரத்தில் ஒருவன் ஆங்கிலத்தில் 1935-ல் வெளிவந்த Captain Blood என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படத்தில் மணிமாறனாக நடித்தவர் 'The Adventures of Robinhood' படத்தில் நடித்த Errol Flynn.

சிண்டு: இவரைப் பார்த்தால் நம்ம வாத்தியார் மாதிரியே இருக்குதுண்ணே!!

அண்டு: இவரோட படத்தைப் பார்த்துத்தான் வாத்தியார் உருவானார்.

Captain Blood பார்க்க..!! youtube link.

சிண்டு: சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சிடாரு, தெரியுமா உங்களுக்கு!

அண்டு: இது தெரியாமலா? போகப்போகத்தான் தெரியும் ஆந்திராவில் எத்தனை டிகிரி ஜுரம் என்று!!

சிண்டு: ரஜினி Vs சிரஞ்சீவி?

அண்டு: இந்த படத்தைப் பார்த்துக்கோ!!

சிண்டு: குசேலன் பத்தி எதாவது சொல்லுங்களேன்!

அண்டு: குசேலனில் ரஜினி பேசி புகழ்மிக்க வசனங்களால் (நான் அரசியலுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன! நீங்க உங்க வேலையைப் பாருங்களேன்) அவருடைய ரசிகமணிகள் கொதித்துப்போய்விட்டார்களாம். இப்போதைக்கு வசனங்களை படத்திலிருந்து நீக்கினாலும், இதனுடைய பாதிப்பு அடுத்து 'ரோபோ'வாக வரவுள்ள ரஜினிக்குத் தான்.

சிண்டு: அண்ணே! நல்ல ஆங்கிலப்படங்கள் எல்லாம் megaupload, rapidshare-ல் இருக்கு. இதை எப்படி தரவிறக்கம் செய்வது. கொஞ்சம் சொல்லுங்களேன்.

அண்டு: www.megadl.info, www.megafast.info, www.megafanatic.com இந்த தளங்களுக்கு போய் உனக்குத் தேவையான free லிங்க்-ஐ premiumlink-ஆக மாற்றிக்கொள்ளலாம். பிறகு சுலபமாக தரவிறக்கம் செய்யலாம்.

Tuesday, August 12, 2008

சாரு நிவேதிதாவின் விமர்சனம் மற்றும் கொஞ்சம் தைமூர்

ew Page 1

குசேலன் படம் பார்த்தேன். பரவாயில்லை! 'கதபறயும்போள்' படம் போல இதுவும் மொக்கையாகத்தான் இருக்கிறது.பசுபதி மற்றும் ரஜினி தவிர யாரும் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. ரஜினியின் இமேஜை நம்பி மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு. இப்படத்தில் ரஜினியைக் குறை சொல்லும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஓவர் ஹைப் கொடுத்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது வாசு. சுமாராக படம் எடுத்துவிட்டு சிவாஜி, தசாவதாரம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறது அவர்களுக்கே ஓவரா படலயா?

இது ஒரு பக்கம் இருக்க. நம்ம சாரு சார், அவரோட தளத்தில் குசேலனை ஒரு பிடி பிடித்துள்ளார். ஆனாலும்,

"ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து? தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்." என்று எழுதி இருந்தார். ஆனால் "ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா?" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்...? அது அவருக்கே புரிந்த விடயம்.

சாரு சார் ஒரு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நூல் எழுதுவதாக சொல்லி இருந்தார். அவருக்கு கவுண்டமணியையே தெரியாதுனு சொல்லிட்டு தமிழ் சினிமாவை பற்றி எப்படி எழுத முடியும் என்று தெரியவில்லை. காமெடியையும் தமிழ் சினிமாவையும் எப்பவும் பிரிக்கமுடியாது. மற்றும் என்னைப் பொருத்தவரை காமெடியன்களுக்குத்தான் சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்புத் திறன் உண்டு. அந்த வகையில் கவுண்டரும் சளைத்தவர் அல்ல. காலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்?

***************

மம்மி படத்தில் வருவது போல ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன். 14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!

**************

Tuesday, August 05, 2008

எம்.ஆர்.ராதா, Zulu, மற்றும் குசேலன்

குசேலன் படத்தில் 25% தான் நான் வருகிறேன் என்று ரஜினி கூறிய பிறகும். பி.வாசு சொன்னத கேட்டு போய், பார்த்து, ஆப்பு வாங்கிவந்து தமிழ்மணத்தில் புலம்பும் அறிவுஜீவிகளே! நீங்கள் ஏமாந்து போனதுக்கு ரஜினியின் டவுசரை எதுக்கு கயட்டனும்!! எதோ போனதுக்கு நயந்தாராவை மீனாவை பார்த்தோமா! வந்தோமானு இருக்கணும்!!

************************

"தொழில்நுட்பத்திலயும் நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறி இருக்கு. ஆனால் சம்ஜெக்ட் தான் அட்வான்ஸ் ஆகல. போட்டி போட்டுகிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப்பார்க்கிறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது? இதுவாமுன்னேற்றம். ஒன்னு சொல்லுரேன் கேளுங்க. நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சி போனாத்தான் தமிழ்படவுலகம் உருப்படும். அப்பத்தான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதையா எடுக்க முன்வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களையே காட்டி ஜனங்களை ஏமாற்ற முடியும்" - இதைக் கூறியது நானில்லை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தவிகடனில் ராதா அவர்களுடைய பழைய பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். இதில் என்ன வியப்பென்றால், அன்று ராதா அவர்கள் கூறியது இன்று நம் தமிழ்த்திரையுலகிற்கு பொருந்துகிறது. ஆனால் ஒரு வேறுபாடு என்னவென்றால், ராதா கூறிய நாலைந்து பேர்... அப்போது முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் அவர்களைத்தான் குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போது நிலைமை இன்னும் மோசம். ரஜினி, கமல் கூட மாறுபட்ட கதையில் நடிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் நடிகர்களாக வலம் வரும் பெரும்பாலானவர்கள் அரைச்சமாவுக் கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். இயக்குனர்களில் கதைக்களம் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் நம்பிக்கையளிப்பது பாலா, சேரன், மிஷ்கின், அமீர். மேலும் புதுவரவுகளான வசந்தபாலன், கற்றதுதமிழ் ராம், சசிகுமார். இருப்பினும் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் போல புதுஇயக்குனர்களும் தமிழ்படவுலகை தன் வசப்படுத்தினால் ஒழிய கதைக்கும், களத்திற்கும் முக்கியத்துவம் ஏற்படாது.

மேலும் ஒழுங்கான தழுவல் படங்கள், குழந்தைகளுக்கான படங்கள், த்ரில்லர் படங்கள் குறைந்துவிட்டன என சொல்லுவதற்கில்லை..வருவதேயில்லை. சற்றுமுன் வந்து தமிழ்மணத்தில் ஏகத்துக்குக் கிழிக்கப்பட்ட குசேலன் போன்ற மொக்கைப்படங்களும், விஜய், ஜெயம்ரவி பாணி மசாலாப் படங்கள் தான், தழுவல் படங்களின் அடையாளங்களாக உள்ளன. 'மூடுபனி', 'ஜுலிகணபதி' போன்ற படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவலாக இருப்பினும், நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் திரைக்கதையை கௌதம்மேனன் அட்சரம் பிசகாமல் ஆங்கிலப்படத்திருந்து சுட்டுவிட்டு, மற்றவர் படங்களை (பொல்லாதவன்) குறை கூறிக்கொண்டு திரிகிறார். 'அஞ்சலி'க்குப் பிறகு ஒரு படம் கூட குழந்தைகளை மையமாகக் கொண்டு தமிழில் வரவேயில்லை.

********************

நான் சமீபத்தில் பார்த்த மற்றொரு ஆங்கிலப்படம் "Zulu". ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் காலனிஆதிக்கம் செலுத்தியபோது, ஜுலு என்ற ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் ஏற்படும் போர் குறித்த உண்மைச் சம்பவம் தான் கதை. இதோ இப்படத்திற்கான youtube இணைப்பு. தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

Zulu Trailer



திகில் படவரிசையில் சாகாவரம் பெற்ற 'Rosemary's baby' படத்தையும், Sergio leone இயக்கத்தில் வெளிவந்த "A fistful of Dynamite" என்ற western genre படத்தையும் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது, அது பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொள்வோம்.

New Page 1

புரட்சி பற்றி 'A fistful of dynamite' படத்தில் வரும் ஒரு வசனம். பின்னணியில் Ennio morricone-ன் இசை தவழ்ந்து கொண்டிருக்கிறது.




***********************