Monday, October 15, 2012

பெயரில் என்ன இருக்கா

முன்பு நொண்டி, முடவன், குருடன், செவிடன், ஊமை என்று குறிப்பிடப்பட்டவர்களை, ஊனமுற்றவர்கள் (physically handicapped, physically disabled) என குறிப்பிட்டோம், பிறகு அதுவே மாற்றுத்திறனாளிகள் (differently abled) என அழைக்கும் நிலையில் இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Euphemism என்பார்கள். தமிழில் இடக்கர் அடக்கல், மங்கலம், குழூவுக்குறி என மூன்றுவகையாகச் சொல்லப்படுகின்றன. நம்முடைய நாளிதழ்கள் பல விஷயங்களை அமெரிக்க ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்கிறார்கள். அதன் காரணமாக பல ஆங்கில Euphemistic சொற்கள் மொழிபெயர்ந்து தமிழில் உள்ளன. வன்புணர்வு, வல்லுறவு என்பதை பலர் கற்பழிப்பு (அதென்ன! கற்பழித்தல், இவர்கள் சொல்லும் கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் போகுமா, வற்புறுத்தியவனுக்கு கற்பு போகாதா?) என்கிறார்கள். இப்போது அதுவும் மாறி பாலியல் வன்முறை(வன்கொடுமை என்றாகிவிட்ட்து. முதலில் தாசி, தேவடியாள்(தேவரடியாள்), பிறகு விபச்சாரி, பிறகு விலைமாது, இப்போது பாலியல் தொழிலாளி. இப்போதெல்லாம் செய்திகளில் இறந்தார்கள், கொல்லப்பட்டார்கள் என்று வருவதில்லை, உயிர் இழந்தார்கள் என்று மங்கல சொல்லாக வருகிறது. வேலைநீக்கம் என்பதில்லை ஆட்குறைப்பு. ஏழை என்பதில்லை வாழ வசதியற்றோர். முன்பு முதியோர் எனக் குறிப்பிடப்பட்டவர், தற்போது மூத்தகுடிமகன். குள்ளமானவரை உயரம் குறைவானவர் என்றும், குண்டானவரை எடைகூடியவர் என்றும், ஒல்லியானவரை எடைகுறைந்தவர் என்றும் அழைக்கிறார்கள். பெண்களிடம் கிண்டல்கேலி செய்வது முதல் பொறுக்கித்தனம் செய்வதுவரை Eve teasing என்று பெயர். 

பல சமயம் இத்தகைய இடக்கர் அடக்கல் சொற்கள் பிரச்சனையை, உண்மையை  மறைக்கவே பயன்படுகின்றன. பெயரை மென்மையானதாக மாற்றுவதால் பாதிக்கப்பட்டவரின் பிரச்சனை தீர்வதிற்குப் பதில் மழுங்கடிக்கப் படுகிறது. உணர்வு முக்கியம் தான், ஆனால் அதைவிட முக்கியம் உரிமை. உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு உணர்வை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன். 

ஜாதிப் பெயர்களின் வழக்கொழிந்து தாழ்த்தப்பட்டவர்கள், தலித் என சொல்லப்பட்டு வருகிறது. தலித் என்றால் ஹிந்தியில் நசுக்கப்பட்டவர்கள் என்று பொருள். ஆனால் காந்தி நோகாமல் மென்மையாகஹரிஜன்’ (கடவுளின் மக்கள்) என்றார். பெயரை மாற்றினால் மட்டுமே பிரச்சனை தீர்ந்துவிடாது என அம்பேத்கார் இதனை கடுமையாக எதிர்த்தார். இருந்தபோதிலும், காங்கிரஸ்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களை குறிக்கத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்கள் வருகிறார்கள். காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக B.G.கேர் என்பவர் ஹரிஜன் என்ற வார்த்தை மிகவும் சிறப்பானது, நர்சி மேத்தா எழுதிய குஜராத்தி பாடலில் கூட வருகிறது என்றார். நர்சி மேத்தா ஒரு பிராமண வகுப்பைச் சார்ந்தவர். அவர் குறிப்பிட்ட ஹரிஜன் என்ற சொல், கோவிலில் நடனமாடும் தேவரடியாள்களுக்கு கோவிலில் பணிபுரியும் பிராமணர்களுக்கும் பிறந்த குழந்தைகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்டவை. “எப்படி காந்தி அவர்கள் ஹரிஜன் எனக்கூறலாம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ன தாசிகளுக்குப் பிறந்தவர்களா?” எனக் அம்பேத்கார் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கம்யுனிஸ பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஆயிரம் காலம் அடிமை என்றாயே, ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒன்ஸ்மோர் கொசுவத்தி
நான் பத்தாம் வகுப்புக்கு சென்ற முதல் நாள் முதல் பாடம் தமிழ். தமிழாசிரியர் பெயர் கங்காதரன், மிகவும் கோபம் மிக்கவர். எங்க சீனியர்கள் அவரைப் பற்றி எங்களுக்கு சொன்னது கங்காதரன் முன்னாடி சிரிக்காதே! சிரிச்சா தன்னைப் பார்த்துத்தான் நாம சிரிக்கிறோம் என நினைத்து வெளுத்துவிடுவார்“. வகுப்புக்கு வந்த தமிழாசிரியர் சிலப்பதிகாரம் பற்றி பேசத் துவங்கினார். அப்போது கோவலன் தன்னுடைய உடைமைகளை இழந்து கண்ணகியுடன் மதுரைக்குச் செல்லும்போது துணையாக வந்த பௌத்த பெண்துறவி பெயர் என்ன?“ எனக் கேட்டார். அப்பெண்துறவியின் பெயர் கௌந்தியடிகள். என்னுடைய அம்மா ஏற்கனவே சிலப்பதிகாரத்தை கதையாகச் சொல்லும்போது எனக்கு சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அன்று எனக்கு எவ்வளவு யோசித்தும் நினைவில் வரவில்லை. என்னுடைய பக்கத்தில் இருந்த முருகன் (எங்க ஊரில் இருந்த முருகன் டாக்கீஸ் முதலாளியோட பையன்) தடாலடிய எழுந்து ஔவையார்என ஒரு போடு போட்டான். என்னையும் அறியாமல் களுக் என சிரித்துவிட்டேன். அவ்வளவுதான் கங்காதரன் கடுங்கோபதரனாக மாறி என் மண்டையில் நறுக் நறுக் என கொட்டி வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். பிறகு காலாண்டுத் தேர்வின் மதிப்பெண் வரும்வரை அவருக்கு நான் வேண்டாப்பிள்ளையாகவே இருந்தேன். 

முருகனைச் சொல்லி தவறில்லை. ஔவையார் திரைப்படத்தில் ஔவையாராவும், பூம்புகார் திரைப்படத்தில் கௌந்தியடிகளாகவும் நடித்தது கே.பி.சுந்தரம்பாள். அதனால் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். எப்படியோ ஔவையார் எனச் சொல்வதற்கு பதில் கே.பி சுந்தரம்பாள் எனச் சொல்லாமல் போனான்.

7 comments:

  1. சிந்திக்கவும் சிரித்து மகிழவுமான
    இரண்டு செய்திகளை ஒரே பதிவில்
    கொடுக்காமல் தனித்தனியாக கொடுத்திருக்கலாமோ
    என எண்ணினேன்
    இரண்டு பதிவுகளும் அததற்குரிய நிலையில் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வவ்வால் has left a new comment on your post "Euphemism":

    குட்டிப்பிசாசு,

    நல்ல கலக்கல் அடக்கர் :-))

    வீரபாண்டிய கட்ட பொம்மன் ,யாருன்னு கேட்டா சிவாஜின்னு சொன்ன திறமைசாலிங்கள் கூட படிச்சிருக்கேனாக்கும் :-))

    ReplyDelete
  3. ஹை பிசாசு, ஓட்டுப் பட்டையை கடைசியா ரெடி பண்ணிட்டே போலிருக்கே!! குட்!!

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ இணையத்தில் பிராய்ந்து தேடி ஒரு வழியாக சரி செய்துவிட்டேன்.

      Delete
  4. அருமை!!

    ReplyDelete
  5. MGM Resorts Announces Purchase of New Port Canaveral Beach
    The casino will operate 24/7, with the 천안 출장마사지 operator 제주도 출장샵 and 파주 출장안마 its parent company, Wynn Resorts, 하남 출장안마 in partnership with 경기도 출장샵 Wynn Resorts.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய