Friday, November 23, 2007

ரஜினி சொன்ன கதையும் ஹாலிவுட் படமும்

'பாபா'வை ரஜினியால் மட்டுமல்ல நம்மாலும் மறக்கவே முடியாது. அப்படியே மறந்தாலும் 'பாபா' படத்தையொட்டி ரஜினி சொன்ன கதையை ஒருபோதும் மறக்க இயலாது.பாபாஜி இரண்டாயிரம் வருடங்களாக இமயமலையில் வாழ்ந்து வருவதாகவும், இயேசு பாபாஜியிடம் யோகத்தைக் கற்றதாகவும் சொன்னார் ரஜினி. இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியொரு கதையா? என மருத்துவர் ராமதாஸ் ஒருபக்கம் கிண்டலடிக்க(சின்ன பாபாஜி! ராமதாஸ் சொன்னதுக்கு கவலைபடாமல,் நீங்க "சாயா!மாயா!" போல "ஆயா!பாயா!" என்று கருத்துக்களை அடுத்த படத்தில் உதிர்க்கணும்), "இரண்டாயிரம் வருஷமாக இமயமலையில் இருப்பவரால் ஜனங்களுக்கு துரும்பளவாவது பயன் உண்டா? யாருக்கும் பயன்படாதவர் இரண்டாயிரம் வருடம் வாழ்ந்தால் என்ன! இரண்டு நிமுடம் வாழ்ந்தால் என்ன!" என்று சிலர் இன்னொருபுறமும் கேள்வி எழுப்ப, பாபா கதை நகைப்புக்குள்ளானது அனைவரும் அறிந்ததே.இதற்குப் பிறகு சந்திரமுகி படத்துடைய 100-நாள் விழாவில் தான் பாபா பற்றி ரஜினி பேசினார். (இதில் கொடுமை என்னவென்றால், நம்ம ரஜினிஜியே பாபாஜியைப் பார்த்தது இல்லை).

இப்போது இதே கதை ஹாலிவுட்டில் படமாகிறது! இயேசுவின் 13 வயது முதல் 30 வயதுவரை உள்ள வாழ்க்கை குறித்து பைபிளில் எந்த செய்தியும் இல்லை. இந்த வருடங்களில் அவர் ஒரு பெண்ணை காதலித்து மணந்ததாகவும் இந்தியாவுக்கு வந்து பவுத்த மற்றும் இந்து தர்மங்கள் குறித்து கற்றதாகவும் ஒரு கதை உலவி வருகிறது. இயேசுவுக்கு நேரடி வாரிசு உண்டு என்ற பின்னணியில் உருவான 'டாவின்சி கோட்' நாவலாகவும் திரைப்படமாகவும் வந்து ரசிகர் நெஞ்சத்தை மட்டுகில்லாமல் பணத்தையும் அள்ளியது. (இதேபோல இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக சித்தரித்த The Last Temptation of Christ என்ற திரைப்படமும் பெரியளவில் எதிப்புகளைச் சந்தித்தது. இதைப்பற்றி தனியாக ஓர் இடுகை போடவுள்ளேன்). இதையெல்லாம் மனதில் வைத்து, இயேசுவின் 13 முதல் 30 வயதுவரையான வாழ்க்கையை காதல், கல்யாணம், இந்திய வருகை ஆகியவற்றின் பின்னணியில் எடுக்கிறார்.(இந்தியாவில் இமயமலைக்கு வரும் இயேசு பெருமானுக்கு ஒபனிங்சாங் இருக்குமா? இருக்கவே இருக்கு நம்ம எம்ஜிஆர் பாட்டு ரீமிக்ச் போட வேண்டியது தான்! "புதியவானம்! புதியபூமி! எங்கும் பனிமழை பொழிகிறது!") ஹாலிவுட் இயக்குனர் Drew Heriot. இந்தக் கதை எழுத்தாளர் Levi H. Dowling எழுதிய Aquarian Gospel of Jesus the Christ நாவலின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் 1908-ல் வெளிவந்தது. புதிய ஏர்பாட்டில் சொல்லப்படாத இயேசுவின் 18 வருட மௌனத்தையும் கூறுகிறது. இயேசுவின் இந்திய வருகை குறித்த சுவாரசியமான தகவல்களுக்கு இயக்குனர் Drew Heriot-க்கு ரஜினியை தவிர வேறு தகுதியான நபர் கிடைக்கமாட்டார்.(எப்படியோ படம் "பாபா" போல ஊத்திக்கொள்ளாமல் இருந்தால் சரி!)

நன்றி: தமிழ்சினிமா.காம்

1 comment:

  1. மெய்யாலுமா? இந்த சேதி.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய