Tuesday, August 05, 2008

எம்.ஆர்.ராதா, Zulu, மற்றும் குசேலன்

குசேலன் படத்தில் 25% தான் நான் வருகிறேன் என்று ரஜினி கூறிய பிறகும். பி.வாசு சொன்னத கேட்டு போய், பார்த்து, ஆப்பு வாங்கிவந்து தமிழ்மணத்தில் புலம்பும் அறிவுஜீவிகளே! நீங்கள் ஏமாந்து போனதுக்கு ரஜினியின் டவுசரை எதுக்கு கயட்டனும்!! எதோ போனதுக்கு நயந்தாராவை மீனாவை பார்த்தோமா! வந்தோமானு இருக்கணும்!!

************************

"தொழில்நுட்பத்திலயும் நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறி இருக்கு. ஆனால் சம்ஜெக்ட் தான் அட்வான்ஸ் ஆகல. போட்டி போட்டுகிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப்பார்க்கிறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது? இதுவாமுன்னேற்றம். ஒன்னு சொல்லுரேன் கேளுங்க. நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சி போனாத்தான் தமிழ்படவுலகம் உருப்படும். அப்பத்தான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதையா எடுக்க முன்வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களையே காட்டி ஜனங்களை ஏமாற்ற முடியும்" - இதைக் கூறியது நானில்லை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தவிகடனில் ராதா அவர்களுடைய பழைய பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். இதில் என்ன வியப்பென்றால், அன்று ராதா அவர்கள் கூறியது இன்று நம் தமிழ்த்திரையுலகிற்கு பொருந்துகிறது. ஆனால் ஒரு வேறுபாடு என்னவென்றால், ராதா கூறிய நாலைந்து பேர்... அப்போது முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் அவர்களைத்தான் குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போது நிலைமை இன்னும் மோசம். ரஜினி, கமல் கூட மாறுபட்ட கதையில் நடிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் நடிகர்களாக வலம் வரும் பெரும்பாலானவர்கள் அரைச்சமாவுக் கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். இயக்குனர்களில் கதைக்களம் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் நம்பிக்கையளிப்பது பாலா, சேரன், மிஷ்கின், அமீர். மேலும் புதுவரவுகளான வசந்தபாலன், கற்றதுதமிழ் ராம், சசிகுமார். இருப்பினும் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் போல புதுஇயக்குனர்களும் தமிழ்படவுலகை தன் வசப்படுத்தினால் ஒழிய கதைக்கும், களத்திற்கும் முக்கியத்துவம் ஏற்படாது.

மேலும் ஒழுங்கான தழுவல் படங்கள், குழந்தைகளுக்கான படங்கள், த்ரில்லர் படங்கள் குறைந்துவிட்டன என சொல்லுவதற்கில்லை..வருவதேயில்லை. சற்றுமுன் வந்து தமிழ்மணத்தில் ஏகத்துக்குக் கிழிக்கப்பட்ட குசேலன் போன்ற மொக்கைப்படங்களும், விஜய், ஜெயம்ரவி பாணி மசாலாப் படங்கள் தான், தழுவல் படங்களின் அடையாளங்களாக உள்ளன. 'மூடுபனி', 'ஜுலிகணபதி' போன்ற படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவலாக இருப்பினும், நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் திரைக்கதையை கௌதம்மேனன் அட்சரம் பிசகாமல் ஆங்கிலப்படத்திருந்து சுட்டுவிட்டு, மற்றவர் படங்களை (பொல்லாதவன்) குறை கூறிக்கொண்டு திரிகிறார். 'அஞ்சலி'க்குப் பிறகு ஒரு படம் கூட குழந்தைகளை மையமாகக் கொண்டு தமிழில் வரவேயில்லை.

********************

நான் சமீபத்தில் பார்த்த மற்றொரு ஆங்கிலப்படம் "Zulu". ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் காலனிஆதிக்கம் செலுத்தியபோது, ஜுலு என்ற ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் ஏற்படும் போர் குறித்த உண்மைச் சம்பவம் தான் கதை. இதோ இப்படத்திற்கான youtube இணைப்பு. தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

Zulu Trailer



திகில் படவரிசையில் சாகாவரம் பெற்ற 'Rosemary's baby' படத்தையும், Sergio leone இயக்கத்தில் வெளிவந்த "A fistful of Dynamite" என்ற western genre படத்தையும் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது, அது பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொள்வோம்.

New Page 1

புரட்சி பற்றி 'A fistful of dynamite' படத்தில் வரும் ஒரு வசனம். பின்னணியில் Ennio morricone-ன் இசை தவழ்ந்து கொண்டிருக்கிறது.




***********************

1 comment:

  1. //கற்றதுதமிழ் ராம்//

    இவர் நடத்தும் 'சினிமா நிருபர்' பதிவு படித்திருக்கிறீர்களா?

    முழுக்க முழுக்க நடிகைகள் படம் போட்டு வியாபாரம் செய்கிறார். நல்லாவே நம்பிக்கை ஏற்படுத்துகிறார்தான்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய