Friday, August 29, 2008

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா கோட்டைகள் போல, ஜஞ்ஜிராவும் தன்னுடைய கட்டிடச் சிறப்பினால் கைப்பற்ற முடியாத ஒரு கோட்டையாக திகழ்ந்தது. சிவாஜி ஆறு முறை முயற்சி செய்தும் இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இக்கோட்டைப் பற்றி மேலும் தகவல் அறிய இந்த இணைப்புக் செல்லவும்.

http://en.wikipedia.org/wiki/Janjira

http://www.murudjanjira.com/

சரியாக பதில் கூறிய ஞானசேகர், முயற்சி செய்த உருப்படாதது அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய