Tuesday, May 15, 2007

களம் கண்டேன்

காதல்களம் கண்டேன்

இளைப்பாற விடவில்லை!

இதழுடைந்த புன்னகையில்

போர்முரசு கொட்டி

இளக்கிவிட்டாய் மனதை

பருவ சாக்காட்டில்

பட்டறிவு ஏதுமின்றி

விழுப்புண் பெற்றுவிட்டேன்!

நிலைமை துறந்து

நெடுங்கனவை மறந்தேன்

உன்னினைவின் எச்சம்

கண்களில் கசிய

நின்னை சரணடைந்தேன்

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய