Sunday, May 27, 2007

சுற்றுலா சென்று வந்த சுனாமி (அ) வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா


மு.கு: கண்மணி டீச்சரோட விருப்பப்படி, அவருக்கு வழங்க வேண்டிய பட்டத்தையே தலைப்பாக வச்சிட்டேன்!!

***********************************************************************************************

குட்டிபிசாசு said:
தருமி ஐயா,கலக்கல் பதிவு!! நீங்க இப்ப டூர் திலகத்திற்கு பதிவ 4-பாகத்துக்கு கொண்டுவந்து இருக்கிங்க!!
பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பம் - 1-பாகம்
நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - 2-பாகம்
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர் - 3-பாகம்
டூர் திலகத்திற்கு - 4-பாகம்
மேலும் கொண்டு போக முடியுமானு தெரியல!! வாழ்த்துக்கள்!!

*******************************************************************
தருமி said:
குட்டிப் பிசாசு,
என்ன அப்படி சொல்லீட்டீங்க. பாசக்காரக் குடும்பம் அப்படியா உட்டுட்டு போயிடும். இப்பவே அடுத்த பதிவு எங்கேயோ ரெடியாகாமலா இருக்கப் போகுது. இன்னும் வரும் ..ரும் .. ம் ..

*******************************************************************

நம்ம தருமி சார், பார்த்திபன் கிறுக்கல் கவிதை போல! குணா கமல் போல! (இரண்டும் ஒன்று தான்) இறுதி பாகம் வரும்..ரும்..ம்..னு சொல்லிட்டார்! யாரும் இன்னும் இந்த பதிவ போடுற மாதிரி தெரியல(பாசக்கார குடும்பத்துக்கே கதை மறந்துடும் போல)!! அபி அப்பா சொன்னது (நாங்கெல்லாம் இலக்கிய ஆர்வலர்கள் ஆக்கும்) கவனத்தில் வந்தது, உடனே ஆறாவதுவிரல் முளைத்தது, அறிஞர் அண்ணாதுரை ஓர் இரவுல “ஓர் இரவு” எழுதினதுபோல (தாங்கலடா சாமி!!) ஒரு மணிநேரத்தில் ஒரு மொக்கைப்பதிவு தயார்!! (உண்மை என்னவென்றால் வெள்ளிக்கிழமை மாலை குட்டிபிசாசுக்கு வேலைவெட்டி எதுவும் இல்ல!!)

**********************************************************************************

இடம்: பாசக்காரகுடும்ப பயன்படா கழக அலுவலகம் இம்சைகள்: அபிஅப்பா, கோபி, அய்யனார், குட்டிபிசாசு, மின்னுதுமின்னல்

அபிஅப்பா: டேய்! நம்மல போட்டுதள்ள கெளம்பிடங்கயா! கெளம்பிடங்கயா!

மின்னுதுமின்னல்: என்னப்பா ஆச்சு!

அபிஅப்பா: இந்த குட்டிபிசாசு செய்த வேலைக்கு நம்ம எல்லாருக்கும் சேத்து வச்சாங்க ஆப்பு!!

மின்னுதுமின்னல்: கஞ்சாகருப்பு மாதிரி புலம்பம தெளிவா சொல்லு!

அபிஅப்பா: கண்மணி டீச்சருக்கு கண்டன அறிக்கைனு சொல்லி யார் கலாட்டா செய்தாங்கனு எல்லாரையும் கூப்பிட்டு வச்சி விசாரனை நடத்த போராங்களாம்!! எல்லாரும் நல்லா மாட்டிகிட்டோம்!!

குட்டிபிசாசு: இப்ப எதுக்கு முடிஞ்சி போன கல்யாணத்துக்கு மோளம் அடிக்கிறீங்க, எல்லாரும் சேர்ந்துதானே செய்தோம்!

அபிஅப்பா: ஆமா! நீ ஏன் சொல்லமாட்ட!! நீ அடிவாங்கியதால அனுதாப அலைல எஸ்கேப்பு அகிட்டே!! மகளிரணி கண்மணி டீச்சர் ஆதரவு அலைல எஸ்கேப்பு!! நாங்க இல்லடா மாட்டிகிட்டோம்!!

கோபி: நான் அப்பவே சொன்னேன்!! இந்த பிசாசுவே பேசவிடாதீங்கனு, இப்ப பாரு இவன் வாய்க்கு வந்த மாதிரி பேசி, இப்ப எல்லாரும் கூண்டோட கைலாசம்!!

அய்யனார்: இப்ப என்ன செய்யறது!!

குட்டிபிசாசு: அப்ப ஒரு ஐடியா! “வீரர்களுக்கு விசாரணையா! வீணர்களே!” அப்படினு சொல்லி போஸ்டரடிப்போம்!

கோபி: நீ தேரவே மாட்டே!!

அய்யனார்: பேசம கண்மணி டீச்சரிடத்தில் மன்னிப்பு கேட்போம் அபிஅப்பா: மன்னிப்பு! தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...ஆங்..(விஜயகாந்த் செய்யற மாதிரி)...!!

மின்னுதுமின்னல்: மன்னிப்பு கேட்காட்டி, உங்களோட AHM..BHM..கனவுல மண்ணுதான்!! பிறகு அடுத்த வருடமும் 9ம் வகுப்புலதான் குப்பை கொட்டனும்!

அபிஅப்பா: ராசா! ஐயா குட்டிபிசாசு! நீ பேசம HM (தருமி சார்) இடத்தில் போய், நீதான் கண்டன அறிக்கை தயார் செய்தனு ஒத்துக்கயேன்!

குட்டிபிசாசு: நான் தான் செய்தேன்னு தெரிஞ்சா, அவரு டின்னு மட்டும் கட்ட மாட்டாரு! டப்பா டர்ர்ர்ர்னு கிழிஞ்சிடும்!

அபிஅப்பா: அப்ப வேற என்ன வழி!

மின்னுது மின்னல்: மன்னிப்பு!!

(எல்லாரும் கண்மணி டீச்சர பார்த்து மன்னிப்பு கேட்க கிளம்புராங்க...)

இடம்: கிடேசன் பார்க் உயர்னிலைப்பள்ளி இம்சைகள்: கண்மணி டீச்சர், அபிஅப்பா, கோபி, அய்யனார், குட்டிபிசாசு, மின்னுதுமின்னல்

(குட்டிபிசாசு மட்டும் முன்னாடி ஓடிபோய் கண்மணி டீச்சர் கால்ல விழுந்து பாசமழைய பொழிஞ்சி, பக்திபழம்மாதிரி, பாவ்யமா நின்னுட்டு இருக்கு)

கோபி: இந்த பிசாசு கொஞ்சம் முதல் நம்மளோட தானே இருந்தான்! இங்க எப்படி வந்தான்!

அய்யனார்: இந்த பிசாசு முதல்ல புகுந்து கும்மி அடிக்கிறதுக்குள்ள நாம முந்திக்கனும்!

மின்னுதுமின்னல்: டீச்சர்! குட்டி பிசாசு தான் உங்கள “பாசிச கண்மணி டீச்சர்”னு சொன்னான்!

குட்டிபிசாசு: டீச்சர்! டீச்சர்! நான் “பாசமான கண்மணி டீச்சர்”னு தான் சொன்னேன்! இவங்க வேண்டும்னு “பாசிச கண்மணி டீச்சர்”னு போஸ்டர் அடிச்சி ஒட்டிடாங்க!

அபிஅப்பா: அடங்கப்பா! அந்தர் பல்டிடா சாமி! போஸ்டர் எழுதி, கஞ்சி காச்சி, ஒட்டுரவரை எல்லா வேலையும் செய்துட்டு, இங்க வந்து நடிக்கிறயாடா “காக்கா”!

கண்மணி டீச்சர்: அபி! பொய் சொல்லாதே! என்னோட குட்டிபிசாசு தம்பி(சோட்டா பையா) ஒன்னும் அப்படி செய்யமாட்டான்!

மின்னுதுமின்னல்: இவனா “தம்பி” ! சென்ரல் ஜெயில்ல “கம்பி” எண்ணிட்டு வந்தவன் மாதிரி இருக்கான்!!

(தருமி சார் அங்க வர்றார்...)

தருமி சார்: (நடிகர்திலகம் ஸ்டைல்ல..) நீங்க எல்லாரும்தான் கண்டனம் தெரிவிக்க பீடி, தீக்குச்சி கொளுத்தினதா!

அய்யனார்: சார்: பொட்டிக்கடை ஓரமாதான் கொளுத்திட்டு இருந்தோம்! எதோ ஒரு மொன்னநாய் அதை எல்லாம் ஒரு செய்தியா ரெடியோல சொல்லிட்டான்!

கோபி: இப்ப பிரச்சனை இல்ல சார்! சம்பவம் நடந்த இடத்தில், இழப்பீட்டுக்கு ஒரு கட்டு பீடியும் ஒரு தீக்குச்சி பெட்டியும் தருவதா முதலமைச்சர் வேற அறிவிச்சி இருக்கார்!

தருமி சார்: பாசக்காரகுடும்பத்துல இருக்கிற மகளிரணிய விட இந்த பசங்க ரொம்ப அக்டிவா இருக்காங்க! ஐ லய்க் தெம்!

அபிஅப்பா(ரகசியமாக): இவரும் இதே ஸ்கூல்ல தான் (பெயில் ஆகி.. பெயில ஆகி..) படிச்சி இருப்பாரு போல!!

தருமி சார்: (இதுவும் நடிகர்திலகம் ஸ்டைல்ல..) இப்படி வேலவெட்டி இல்லாம தமிழ்நாட்டையே கலக்குரேன்னு தர்ம அடி வாங்கி இருக்கீங்களே...!! உங்கள நெனச்சா எனக்கு ரொ..ம்ப பெருமையா இருக்குப்பா!

அபிஅப்பா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

தருமி சார்: எதுஎப்படியோ! பாசக்கார குடும்பத்துல இருக்கிற மாணவர்கள் இப்படித்தான் உருப்படாம இருக்கணும்! வெரி கூட்...கீப்பிட் அப்...ஹஹ்ஹா...

அபிஅப்பா (ரகசியமாக): டேய்! எல்லாரும் சிரிச்சிடுவோம்! இல்லாட்டி சார் ஜோக்னு இன்னும் எதாவது சொல்லிட போறார்!! (பாசக்கார குடும்பத்தில் உள்ள அனைவரும் லூசு மாதிரி சிரிக்கிறார்கள்)

பி.கு.: இப்பதிவில் மகளிரணிக்கு வாய்ப்பு தரப்படாததற்கு மன்னிக்கவும்!

என் இனிய தமிழ்மண மக்களே! மூளையே இல்லாமல் மொக்கைபதிவு மட்டும் எழுதிய உங்கள் கழுத்துக்களை பதம்பார்த்து வந்த குட்டிபிசாசு, இனி உங்கள் உயிரைவாங்கமல், ஊருக்கு உருப்படியான உப்புமாபதிவுகளை உண்டாக்க நினைக்கிறான்! குற்றத்திற்குரிய, குட்டிபிசாசு..!!

6 comments:

  1. கண்மணி அக்கா,

    டீக்ஹை தீதீ!! எக்ஸாம் ப்ரிபரேஷன் கைஸா சல் ரஹா ஹை!!

    ReplyDelete
  2. தருமி சார்,

    ஊக்கத்திற்கு நன்றி!!

    ReplyDelete
  3. அபிஅப்பா பாணியில் பதிவே படிக்கல. ஆன பின்னூட்டம் போட்டாச்சு.
    மத்தவங்க எல்லாரும் கும்பிக்கு ரெடியா

    ReplyDelete
  4. chinna ammini,

    ippadi kodumai pannathinge...!! kashtapattu ezuthuren! padikkame pinnuttam poduringe!!

    nandri!!

    ReplyDelete
  5. பைய்யா மைன் அச்சீ தரக் எக்ஸாம் கோ தய்யார் ரஹா ஹைன்.
    பாஞ்ச் தின் கே பாத் மிலாங்ஹூன்

    ReplyDelete
  6. கண்மணி அக்கா,

    டீக் ஹை!! முஜேபி ஜ்யாதா பட்னே ஔர் லிக்னே கே காம் ஹை!உஸ்கேபாத் மை தமிழ்நாடு ஆதா ஹூ!வஹா சாத் தின் ஹோனா ஹை் !

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய